முன்பொருநாள்
உன் குரல் கேட்டு என்னுள் காதல் வளர்ந்தது இன்றுவரை உன்னையே நேசிக்கிறேன்
என்னோடு பேசாயோ என ஏங்குகின்றேன் தினமும் உன் உருவம் என் கண்ணில் பதிந்த
நாள் முதல் நான் காணும் அனைத்திலும் உன் திருமுகமே எதிர்பாராத நேரத்தில்
யாருமற்ற இடத்தில் அறிமுகமான உன்னை மீண்டும் காண துடிக்கின்றேன்
ஏமாற்றாமல் வருவாயா உன் வரவை எதிர்பார்த்து புன்முறுவல் பூத்த முகத்தோடு
வாசலில் கோலமிட்டு பாசத்தோடு காத்திருக்கின்றேன் வெகுவிரைவில் வா
வேகுகின்றது என் இதயம் காதல் தீயினால்...