கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-04-25
11:19 AM

Welcome Guest | RSS Main | தமிழனாய் தலை நிமிர்வோம். | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழனாய் தலை நிமிர்வோம்.
தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய்
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய்
அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய்
அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய்
மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.

எத்தனை ஒப்பந்தம் எழுதிக்கிழித்தோமென்னும் நினைவுடனே
என்னென்ன துன்பம் பட்டோமென்றும்- எத்தனைகாலம்
என்னென்ன வகையில்ஏமாந்தோம் இழந்துபோனோமென்றும்
என்றும் எதையும் மறவா நினைவுடனே எவரிடத்திலேயும்
இனியும் ஏமாரும் நினைவுமின்றி செயலுமின்றி எதிலும்
விழிப்புடனே வாழ்பவனே விழியுள்ள தமிழன்.

கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய்
வாயிருந்தும் ஊமையாய் வாழ்வதிலே என்னலாபம் ?
மண்ணில்வாழும் காலத்தில் மானமின்றி வாழ்வதிலே
அந்தவாழ்விலே என்னபலன்தான் உண்டு உலகத்திலே.
தமிழன் என்றால் முதுகெலுப்பு வேண்டாமோ? -தமிழ்வழ
தரணியிலே அரசொன்று வேண்டாமா? சிந்தியுங்கள்.

அடுத்தவன் முதுகிலே குதிரைஓட்டும் சில அங்கிடுதெத்தி
அரசியல் வாதிகளை நம்பிடுவதோ தமிழன் இனியும்?
எதிரிமுன் குனிபவனையெல்லாம் இனித்தமிழன் என்பதோ?
தராசுபோல் தத்தளிக்கும் வாழ்வாகி தரணியிலே அரசின்றி
தவிப்பவனாய் ஈழத்தமிழன் வாழலாமா இனியும்?


கவிவன்
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz