கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-26
11:21 AM

Welcome Guest | RSS Main | அன்னையே தெய்வம்… | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அன்னையே தெய்வம்…

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்
*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு
*
என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்
*
எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா
குழந்தைக்கும்
ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே
*
என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை
*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்
*
நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்
வலிக்காக அழாமல்
என் மேல்
விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர்
சிந்தியதை
*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்
இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz