கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2024-05-04
11:19 PM

Welcome Guest | RSS Main | சிறிலங்காவைப் பாராட்டி ஆதரவு தெரிவிக்கும் ஐநா தீர்மானம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0




சிறிலங்காவைப் பாராட்டி ஆதரவு தெரிவிக்கும் ஐநா தீர்மானம்

May 29, 2009, 11:31 am 

ஜெனிவாவில் மே 26 ஆம் நாள் ஐநாவின் மனித உரிமைகள் மன்றம் நிறைவேற்றிய தீர்மானம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை சிறிலங்கா அரசாங்கம் விடுவித்ததை வரவேற்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை முடிக்கிவிட்டிருக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்பு பறிக்கப்படுவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ள இத்தீர்மானத்தை 29 நாடுகள், மலேசியா உட்பட, ஆதரித்தன. கிருஷ்ண பரமாத்மா, புத்தர், அசோகன், காந்தி ஆகியோர் பிறந்த நாடான இந்தியாவும் இந்த மனித உரிமைகள் அழிப்பு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகளில் ஒன்றாகும்.

நாம் வணங்கி நின்ற நெல்சன் மெண்டாலாவின் தென் ஆப்ரிக்காவும் ஆதரவு தெரிவித்த நாடுகளில் ஒன்றாகும்.

தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன. மனித உரிமைகள் மீறல்களின் பலனை அனுபவித்து விடுதலைப் பெற்ற நாடுகளான போஸ்னியா, ஹெர்சோகோவினா ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.

வாக்களிப்பில் கலந்துகொள்ளாத ஆறு நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆங்கில நகலைக் கீழே காணலாம்:

Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2024  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz