விளிம்பில் என் இனம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு அரங்கேறுகிறது சிக்கித் தவிக்கிறது என் தமிழ் இனம். என்ன பாவம் செய்தோம் தமிழனாக பிறந்ததை தவிர அடுத்த சந்ததிக்கு தமிழன் இருந்தான் என்று கூற மண்டை ஓடுகளும் மனத எலும்புகளும் நிறைந்த புதை குழிகள் தான் எச்சங்கள்.
மனித நேயம் செத்து மடியும் இந்த நாட்டில் மர நிழலில் கூட என் உறவுகளுக்கு நிம்மதி இல்லை. பிழைக்க வந்த பரதேசிக் கும்பல் என் உறவுகளின் ரெத்தத்தை உறுஞ்சிக் குடிக்கிறது.
தழினத்துக்கு யாரிட்ட சாபம் இது தெரிந்தால் என் பங்கிற்கு என் இனத்தின் விடுதலைக்காக மண்டியிட்டு மன்றாடுவேன்.
கோடிகள் கொடுத்து என் இனத்தை குருதியில் மிதக்க வைக்கிறது இந்த பிணம் திண்ணி அரசாங்கம். எத்தனை எதிரிகள் தான் என் இனத்துக்கு சொந்த நாட்டில் தமிழனை கொன்று குவிப்போம் என்று கங்கணம் கட்டும் சிங்களவன் பணத்துக்காக தாய் மண்ணை விற்று
சிங்களவனின் எச்சில் பாதிரத்தை கழுவும் ஒட்டுண்ணிகள் அயல் நாட்டில் கறுப்பு கண்ணாடிக்குள் அரசியல் நடத்தும் இனத் துரோகி - அவள் கணவன் மட்டும் தான் மனிதன் என்று நினைத்து தமிழனை அழிக்க ஆதரவு கொடுக்கும் வெள்ளைக்கார அரக்கி - எல்லதவற்றையும் மீறி எவராவது எங்களுக்காக பேசினால் குரல் வளையை நசுக்கும் அரசியல் சட்டங்கள்.
அத்தனை விலங்குகளுக்குள் என் தலைவனின் படை வீரத்தமிழனின் படை - வெற்றி வரலாறுகள் எம்மை நெகிழ வைத்தாலும் இந்த இன அழிப்பு கலங்க வைக்கிறது - என்ன செய்து என் இனத்தை மீட்பது - தமிழனின் அழுகுரல் ஒருவருக்கும் கேட்க வில்லையா - இல்லை கேட்டும் கேட்காமல் இருக்கிறீர்களா - என் தமிழினம் அழிகிறது.
கொல்வதை விடக் கொடுமை உயிருடன் புசிக்கிறான் சிங்களவன் - தமிழச்சிகளை நிர்வாணப் படுத்துகிறான் - குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை காம வெறித்தனம் கண்ணகி மார்பை பிய்த்து எறிந்து மதுரையை எரித்தாள் - இங்கு எத்தனை கண்ணகிகளின் மார்புகளை அறுத்து எறிகிறான் பற்றி எரியவில்லையே இந்த சிங்களத் தீவு.
யாரிடம் கதறி அழ - படைத்தவன் கூட பரதவிக்க விட்டு விட்டானே… இன்று என் தாயகம் தங்கள் வசம் என்று வெடி போட்டு பால் சோறு கொடுத்து கொண்டாடியது கொலை வெறிக் கும்பல் கொதிக்கிறது உள்ளம் - என் இனத்தைக் கொன்று அந்த ரெத்தச் சூட்டில் குளிர் காய்கிறது பிசாசுக் கும்பல்.
மறத் தமிழன் அவனிடம் மன்றாட வேண்டுமாம் இல்லை மடிந்து போக வேண்டுமாம் நாங்கள் மன்றாடவும் மாட்டோம் மண்டியிடவுடவும் மாட்டோம் வீரத்தமிழராக மடிந்து போவோம்… மீண்டும் முளைத்தெழுவோம்…