சொல்லடி பராசக்தி உயிர் தமிழுக்கும் உடல் மண்ணுக்கு என உறுதிகொண்டு போராடும் என்னைப்போல் ஒரு தமிழனை இரையாக்கி விளையாடுவது உன் பொழுதுபோக்கா ? புவியாளும் பராசக்தி
ஈழத்தில் விழுந்தாலும் சிங்கள கொடுங்கோல் நரக ஆட்சியிலே நாங்கள் மானத்தோடு விழுந்தோம்
ஆயிரம் ஆயிரமாய் தமிழனின் குருதியினை இந்தியக்கடலோரம் இப்புவியினில் ஆறாய் நீர்பாய்ச்சியும் உன் தாகம் தீரவில்லயா ? பாராளும் பராசக்தி
பாரதி கூறியதுபோல சுடர் மிகும் அறிவுடன் எங்களை படைத்துவிட்டு பின் தியாகச்சுடராய் மாற்றி உன் படையிப்பினிலே வேடிக்கை காண்கின்றாயோ ? சொல்லடி பராசக்தி