சொல்லடி பராசக்தி
உயிர் தமிழுக்கும்
உடல் மண்ணுக்கு என
உறுதிகொண்டு போராடும்
என்னைப்போல் ஒரு
தமிழனை இரையாக்கி
விளையாடுவது உன் பொழுதுபோக்கா ?
புவியாளும் பராசக்தி
ஈழத்தில் விழுந்தாலும்
சிங்கள கொடுங்கோல்
நரக ஆட்சியிலே நாங்கள்
மானத்தோடு விழுந்தோம்
ஆயிரம் ஆயிரமாய்
தமிழனின் குருதியினை
இந்தியக்கடலோரம் இப்புவியினில்
ஆறாய் நீர்பாய்ச்சியும்
உன் தாகம் தீரவில்லயா ?
பாராளும் பராசக்தி
பாரதி கூறியதுபோல
சுடர் மிகும் அறிவுடன்
எங்களை படைத்துவிட்டு
பின் தியாகச்சுடராய் மாற்றி
உன் படையிப்பினிலே
வேடிக்கை காண்கின்றாயோ ?
சொல்லடி பராசக்தி