மகரம் 40/100 |
2008, ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை கடல் போல பரந்த மனப்பான்மையுள்ள மகரராசி அன்பர்களே! உங்கள்
ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர்.
ராகுவின் பார்வை ராசிக்கு 3, 11ம் இடத்திலும் கேதுவின் பார்வை ராசிக்கு 5
மற்றும் 9ம் இடத்திலும் பதிகிறது. ஏற்கனவே சனி, குருவின் பார்வையும்
மோசமாக இருக்கிறது. எனவே, திடமாக இருக்கும் மனதில் சஞ்சலம் தோன்றி
சரியாகும். நேற்று வரை ஒளிந்திருந்த உறவுக்காரர்கள், தங்களுக்கு காரியம்
ஆவதற்காக உங்களை நாடி வருவர். நீங்கள் மறுத்தால், உங்களை எதிரிகள்
பட்டியலில் நிரந்தரமாக சேர்த்து விடுவர். கவலை வேண்டாம். நியாயமும்
தர்மமும் ஜெயித்தே தீரும். நல்லவர்களின் ஆலோசனையையும் உதவியையும் கேட்டு
பெறுவதால், உங்கள் செயல்பாடுகளில் வெற்றி பெறுவீர்கள். பொது விஷயங்களில்
நீங்களாகவே புகுந்து எவ்வித கருத்தும் கூறக்கூடாது. பணவரவைப் பெற கடும்
பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். சொத்தை அடமானம் வைத்தோ, ஜாமீன் பேரில்
கடனோ பெற்று சில விஷயங்களைச் சமாளிக்க வேண்டி வரும். இவ்வளவு
சிரமங்களுக்கு மத்தியிலும் ஒரு ஆறுதல். மகர ராகுவும், கடக கேதுவும்
இருக்கும் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் ஞானகாரகனாக விளங்குவர்
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அவ்வகையில், இந்த ராசியினரும்
இக்காலத்தில் அறிவுப்பூர்வமாக செயல்பட்டு, அஷ்டமத்து சனி, 12ம் இடத்து
விரய குரு, தற்போதைய ஜென்ம ராகு ஆகியோரின் சாதகமற்ற நிலையை சமாளிப்பர்
தெய்வானுகூலமும், முன் வினைப்பயனும் சரியாக இருந்தால்! மேலும், திடீரென
கிடைக்கும் ஆதாய பணவரவு அவ்வப்போது கைகொடுக்கும். வெளியூர் பயணம்
வெற்றியைத்தரும். சகோதரர்களுடன் நீங்கள் ஒற்றுமையாக இருக்க
விரும்பினாலும், அவர்கள் உங்களை நம்பாமல் ஒதுங்கியே இருப்பர். வீடு,
வாகன வகையில் முன்னேற்றத்துக்கு இடமில்லை. இருக்கும் நிலையை பாதுகாத்துக்
கொள்வதே சிரமமாகத்தான் இருக்கும். புத்திரர்கள் ஆன்மிக விஷயங்களை அறிவதில்
ஆர்வம் கொள்வர். தங்களது தகுதி, திறமையை வளர்த்து குடும்பத்திற்கு
நற்பெயர் பெற்றுத்தருவர். எதிரிகளின் தொல்லை பெருமளவு குறையும்.
கவனக்குறைவான செயல்களால் அவ்வப்போது கஷ்டங்களைச் சந்திப்பீர்கள்.
குறிப்பாக, நெருப்பு சார்ந்த பணியில் கூடுதல் பாதுகாப்பு அவசியம். கணவன்
மனைவி ஒற்றுமைக்கு கடும் பங்கம் ஏற்படும். எவ்வளவுக்கெவ்வளவு உங்களிடம்
பொறுமை இருக்கிறதோ, அந்தளவுக்கு மேன்மையான பலன் கிடைக்கும். உடல் நலமும்
பாதிக்கப்படும் என்பதால் தகுந்த சிகிச்சைகளுக்காக பணச்செலவு உண்டாகும்.
தந்தைவழி உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படும். அஷ்டம சனியின் தாக்கமும்
உச்சத்தில் இருப்பதால், தொழில் விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்பட
வேண்டும். தொழிலதிபர்கள்:
டெக்ஸ்டைல்ஸ், பால் பொருள் உற்பத்தி, டிராவல்ஸ், நட்சத்திர ஓட்டல்,
கம்ப்யூட்டர், கேமரா, பொம்மை, அச்சகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், இரும்பு சார்ந்த தொழில் செய்பவர்கள் புதிய செயல்திட்டங்களை
உருவாக்குவர். ஆனால், சிலர் இதைக் கெடுக்க நினைப்பர். நல்லவர்களை இனம்
கண்டு துணைக்குச் சேர்த்துக் கொள்வதால் ஓரளவு லாபம் பெறலாம். மற்றவர்களின்
நிலைமை சுமாராகவே இருக்கிறது. தொழில் தொடர்பாக அலுவலகத்தை இடமாற்றம்
செய்யும் நிலை வரலாம். சிரமத்தின் பேரில் புதிய வாடிக்கையாளர்கள்
உருவாவர். கடன்தொகை வசூலில் கஷ்டம் என்றாலும், எதிர்பாராமல் கிடைத்து
ஓரளவு நிலைமையை சரிக்கட்டும். பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியைத் தவிர மற்றவர்களின்
விஷயத்தில் தலையிட்டு வேலையைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. நிர்வாகத்தின்
வழிகாட்டுதலை சீராக பின்பற்றுவதால் இருக்கிற நற்பெயரை தக்கவைக்கலாம்.
சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம்கூட உங்களின் திறமையை
வளர்த்துக்கொள்ள ஏதுவாக அமையும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு
ஏற்படும். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். வியாபாரிகள்:
பால்பொருட்கள், காகிதம், ஜவுளி, பருத்தி ஆடை, அரிசி, மாவு வகைகள்,
மருந்து, நகை, பாத்திரங்கள், தோல் பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், வாசனை
திரவியம், பெயிண்ட், எலக்ட்ரானிக்ஸ் சாதனம் உட்பட பல்வேறு பொருட்களை பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் எதிர்வரும் சிரமங்களை வெற்றிகொள்ளும் விதத்தை
உரியவர்களை அணுகி தெளிவுபெற வேண்டும். பணி இலக்கை சீராக
நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் பிறருக்காக பொறுப் பேற்க கூடாது.
குடும்ப பெண்கள் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் சிரமப்படுவர். ஆனால்,
பணவரவு ஓரளவு இருக்கும் என்பதால் சமாளித்து விடுவார்கள். கணவரின் உடல்நலம்
பாதிக்கப்படலாம். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் புதிய சந்தை
வாய்ப்பை இனிய அணுகுமுறையால் பெறலாம். சரக்கு பரிவர்த்தனையில் பாதுகாப்பு
நடைமுறை அவசியம். மாணவர்கள்:
தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மாடலிங், கட்டட
இலக்கியம், தத்துவம், சிற்பக்கலை, ஓட்டல் மேனேஜ்மென்ட், உட்பட பல்வேறு
துறையில் பயிற்சிபெறும் மாணவர்கள் படிப்பில் பின் தங்குவர். மற்றவர்கள்
மனதை ஒருமுகப்படுத்தி படித்தால், கூடுதல் மார்க் பெற வழியுண்டு.
படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து வேறுபாடு
ஏற்படும். வீண் விவாதம் கூடாது. புண்ணிய பலன்கள் முக்கிய சமயத்தில்
துணைநின்று நல்வழி நடத்தும். அரசியல்வாதிகள்:
அஷ்டமச் சனியின் துவக்கத்தில் இருந்தே பல்வேறு எதிர்மறை சூழ்நிலைகளை
சந்தித்திருப்பீர்கள். ராகு-கேது பெயர்ச்சியும் சாதகமற்ற நிலையை மேலும்
அதிகப்படுத்துகிறது. எனவே, எந்த செயலையும் முன்யோசனையுடன் மேற்கொள்வது
நலம் தரும். உங்களால் பயன்பெற்ற ஆதரவாளர்கள் சிரமமான சூழ்நிலையிலும்
உறுதுணையாக நின்று உதவுவர். புத்திரர்களின் செயல் மனதை மகிழ்விக்கும்.
எதிரிகளால் வரும் தொல்லை விலகிப்போகும். அரசியலுடன் தொழில் நடத்துவோர்
அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். விவசாயிகள்:
ஆர்வத்துடன் விவசாய பணிகளில் ஈடுபடுவதால் உழைப்புக்கேற்ற பயிர் மகசூல்
அதிகரிக்கும். கால்நடை வகையில் பராமரிப்பு செலவு கூடும். நிலம் தொடர்பான
பிரச்னை உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பரிகாரம்: திருநாகேஸ்வரம் ராகுபகவானை வழிபடுவதால் செயல்திறன் அதிகரிக்கும். |