கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
9:59 PM

Welcome Guest | RSS Main | மிதுனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் 40/100


2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை



நிதானமுடன் செயல்புரிந்து எதிலும் வெற்றிபெறும் மிதுனராசி அன்பர்களே!




உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகுவும், இரண்டாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 6, 10ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 4 மற்றும் 12ம் இடத்திலும் பதிகிறது. இதனால் புதிய செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்களைச் சந்திக்கலாம். அதுபோல், பேச்சாலும் சில சிரமங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை ராகு- கேது உருவாக்குவர். சகோதரர்கள் வாழ்வில் முன்னேறுவர். வீடு, வாகன வகையில் அதிக பராமரிப்பு செலவு, பொருள் திருட்டு உள்ளிட்ட பலன்கள் நடக்கக்கூடும். தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். நெருப்பு மற்றும் கூர்மையான பொருட்களை கையாளும் போது மிகமிக கவனம் வேண்டும். நன்னடத்தை இல்லாதவர்களுடன் பழகுவதையும், உதவுவதையும் அறவே தவிர்க்கவும். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து ஊக்கப்படுத்துவதால் அவர்களின் செயல்பாடு அதிகரிக்கும். சொத்து தொடர்புடைய ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல் நலம் பாதிக்கும் என்பதால், நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றவும். மருத்துவச் செலவு கூடுவதை தவிர்க்க கடும் பிரயாசை எடுக்க வேண்டியிருக்கும். ராகு, கேதுவின் அமர்வு அனுகூலக் குறைவை பெருமளவு தந்தாலும் குரு, சனி ஆகிய கிரகங்கள் உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான ஆதார பலனை தாராளமாக அள்ளி வழங்கும் நிலையில் உள்ளனர். இதனால் ராகு, கேதுவின் சோதனை களத்தை சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். எதிரிகளை உரிய முறையில் சமாளித்து அனுகூல பலனை அடைவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை ஒருவருக்கொருவர் சார்புடன் இருந்து குடும்ப பெருமையை பாதுகாக்கும். புதிய நண்பர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். தந்தைவழி உறவினர்களிடம் நட்புறவு பலம் பெறும். தொழில் சார்ந்த வகையில் சுய சிந்தனையுடன் செயல்படுவதால் இருக்கும் நிலையை தக்கவைக்கவும். எதிர்கால தேவைக்காக பணம் சேமிப்பீர்கள்.

தேவையில்லாமல் பயணம் புறப்பட வேண்டாம். தொழிலதிபர்கள்: கண் ஆஸ்பத்திரி, நிதி நிறுவனம், மலைத்தோட்டப் பயிர்கள், தங்கம் சார்ந்த தொழில், ரியல் எஸ்டேட், புத்தக வெளியீட்டாளர், அச்சகம், வாசனைப் பொருட்கள் உற்பத்தி, அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் தமக்கு கிடைத்த தொழில் வாய்ப்புகளை கவனமுடன் நிறைவேற்றுவதால் இருக்கும் நிலையை தக்கவைக்கலாம். மற்றவர்களுக்கு நிலைமை ஓரளவு நன்றாக இருக்கும். மூலதனத்தை அதிகரிக்க நினைத் தால் ஒன்றுக்கு பத்துமுறை யோசிக்க வேண்டும். இவ்விஷயத்தில், அவரவர் தகுதிக்கேற்ற வகையில் செயல்படவும். சமூக பொறுப்புகள், கவுரவப்பதவிகள் மீது ஆசை ஏற்பட்டு, அதிலேயே கவனம் செல்வதால், சொந்தப் பணியில் மாற்றம் ஏற்படலாம். பணபரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்குரிய பணி இலக்கை நிறைவேற்றுவதில் இடைஞ்சல்கள் வரும். அவற்றை நேரம் காலம் பாராமல், பொறுப்புடன் நிறைவேற்றுவதால் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறலாம். சக ஊழியர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகளைச் சந்திக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடன் கொடுங்கள். அதே நேரம் பணி விஷயத்தில், சக ஊழியர்கள் அனுகூலத்துடன் நடந்து கொள்வர். குடும்ப வளர்ச்சிக்கு தேவையான பணக்கடன் பெறுவீர்கள்.

வியாபாரிகள்: நவரத்தினங்களுடன் கூடிய நகை, ஜவுளி, விளையாட்டு பொருள், ஸ்டேஷனரி, காகிதப்பொருட்கள், இனிப்பு வகை, தானியம், அலங்கார பொருட்கள், பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நகை அடகுக்கடை நடத்துபவர் உள்ளிட்ட வியாபாரத்தில் உள்ளவர்கள் நல்ல பல வாய்ப்புகளை அடைவர். இதை பயன்படுத்திக் கொள்ள சிக்கல்கள் வரும். இவற்றை ஜெயித்து விட்டால், எதிர்காலத்தில் செழிப்புடன் வாழ வழிகிடைக்கும். மற்றவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி கிடைத்தாலும், ஆடம்பர செலவால் பெற்றதை இழக்கும் சூழ்நிலையுடன் வியாபாரத்தில் பாதிப்பும் வரலாம். நிதானமாக நடந்து கொள்ளவும். சரக்கு வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் பணி இலக்கு பூர்த்தியாகும். சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை ஏற்படலாம். குடும்ப பெண்கள் கணவரின் வருமானத்திற்கு மாறாக செலவுகளைச் செய்தும், பிற விஷயங்களில் அவரது கருத்திற்கு மாறாக நடந்தும் பிரச்னைகளை வலுவில் இழுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாகத் தெரிகிறது. கவனம். வெளியில் செல்லும் போதும், வீட்டில் நகைகளை பாதுகாக்கும் இடத்திலும் மிக கவனம் வேண்டும். திருட்டுக்கான வாய்ப்பு தெரிகிறது. சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கும் போது, அளவுடன் பெற வேண்டும். அதிக முதலீடும், கடன் வாங்குவதும் தொழிலுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும்.

மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், சாஸ்திரம், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், மண்வள ஆராய்ச்சி, நீர்நிலை பராமரிப்பு, வங்கியியல், வியாபார மேலாண்மை, நிதி நிர்வாகம், சட்டம், விவசாயம், இலக்கியம், கண் மருத்துவம், இதழியல் துறை மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவு முன்னேற்றம் காட்டுவர். பணச்செலவில் சிக்கன நடைமுறை அவசியம். சக மாணவர்களுடன் சுமூக நட்புறவு பேணுவது நலம். பெற்றோரிடம் பாசம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: சமூகத்தில் நற்பெயர் பெற ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். ஆதரவாளர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்வர். எதிரிகளுடன் நேரடி மோதல் வர வாய்ப்புள்ளதால், அவர்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பேசாமல், ஒதுங்கிப் போவதால் நன்மை உண்டு. புத்திரர்கள் உங்கள் அரசியல் பணிக்கு ஓரளவே உதவுவர். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. அரசு அதிகாரிகளிடம் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புகளும் தெரிகின்றன. கவனம். அரசியலுடன், தொழில் நடத்தும் வாய்ப்பு பெற்றவர்கள் மூலதனத்தை இழக்க நேரிடும். புதிய மூலதனம் வேண்டாம். இருப்பதைக் காக்கவே கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.




விவசாயிகள்: விவசாயப் பணிகள் சீராக நடக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதிக்கு மீறிய கடன் பெறக்கூடாது. கால்நடைகளால் பணக்கஷ்டம் வரும். அவற்றை வளர்ப்பதில், தகுந்த பாதுகாப்பு முறை அவசியம்.




பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வழி படுவதால் சிரமம் அணுகாத நன்னிலை பெறுவீர்கள்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz