துலாம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
நற்பலன் (60/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் சனிபகவான் வருட முற்பகுதியிலும், ராகு வருடத்தின் பிற்பகுதியிலும் நற்பலன்களை வழங்கும் நிலையில் உள்ளனர். வாழ்வில் உயர்வு தரும் பலன்களை பெறலாம். பேச்சில் நிதானம் நிறைந்திருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சில ஜாதகர்களுக்கு பூர்வ புண்ணிய அடிப்படையில், அதிர்ஷ்டகரமான வகையில் ஆதாய பணவரவு கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான், அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார்.
இந்த சமயங்களில் சகோதர ஒற்றுமை வியக்கும் அளவில் மாறிவிடும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி எளிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலையே இருக்கும். புத்திரர்களின் எதிர்காலம் குறித்த கவலை வளரும். உடல்நிலை ஒத்துழைக்காது. தம்பதியர் ஒற்றுமை பலம் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். ஆன்மிக சான்றோர்களின் அன்பும், ஆசியும் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமே.
தொழிலதிபர்கள்:
இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தண்ணீர் சார்ந்த தொழில், குளிர்பானம்,
பால் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிக்கும் தொழில் அதிபர்கள்
கூடுதல் உற்பத்தியும், புதிய ஒப்பந்தமும் கிடைக்கப் பெறுவர். கடல் சார்ந்த
தொழில் செய்பவர்கள், எஸ்டேட் உரிமையாளர்கள், கடற்கரை, லாட்ஜ், தொழிற்கல்வி
நிறுவனம் நடத்துவோர் தொழிலில் நல்ல வரவேற்பு பெறுவர். பணவரவு
அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வரவும் செலவும் சரியென்ற நிலை ஏற்படும். மே,
ஜூன், ஜூலை மாதங்களில் புதிய சொத்து வாங்கும் அனுகூலம் உண்டு. தொழிலில்
இருந்த போட்டி பெருமளவு குறையும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக
கிடைக்கும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எண்ணெய், உணவு பண்டங்கள், விவசாய இடுபொருட்கள்,
தண்ணீர் சார்ந்த பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்பானம், மீன்பிடி
சாதனங்கள், கண் கண்ணாடி, குடை, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கம்ப்யூட்டர்,
கலை அழகுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள் விற்பவர்கள் தாராள பணவரவும்,
சமூக அந்தஸ்தும் பெறுவர். மற்றவர்களுக்கு சுமாரான நிலை இருக்கும். மே,
ஜூன், ஜூலை மாதங்களில் பெருமளவு அபிவிருத்தியும், புதிய கிளை
துவங்குவதுமான நற்பலன் உண்டு. வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின்
பாராட்டைப் பெறுவர். சக ஊழியர்களுடன் சுமூகமான சூழ்நிலை நிறைந்திருக்கும்.
குறிப்பாக கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணியிலுள்ளவர்கள்
புதிய யுக்திகளைப் பயன்படுத்தி கூடுதல் வேலை வாய்ப்பும், தாராள பணவரவும்
பெறுவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம்
எளிதாக கிடைக்கும். ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதற்கு யோகமிருக்கிறது.
மாணவர்கள்:
மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், ஓட்டல்
மேனேஜ்மென்ட், கடல்சார் படிப்பு, சட்டம், சினிமா தொழில்நுட்பம், அனிமேஷன்,
விளம்பரமாடலிங், அழகுக்கலை உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும்
மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும். மற்ற மாணவர்கள் ஓரளவுக்கு
பரவாயில்லை என்ற நிலை இருக்கும். சகமாணவர்களுடன் விவாதம் செய்வதன் மூலம்
கருத்து வேறுபாடு வளரும். ஜூலைக்குப் பிறகு இந்த நிலைமை அதிகரிக்கும்.
கவனமாக இருங்கள்.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பதவி
உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்கும். இதன்பிறகு வேலைப்பளு,
அதிகாரிகளின் அதிருப்தி உள்ளிட்ட சிரமமான நிலை ஏற்படும். குடும்பப்
பெண்கள், கணவரின் நல் அன்பும், சீரான பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு
நடத்துவர். புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. ஆபரண சேர்க்கை
தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில்புரியும் பெண்கள், வியாபாரம் சிறந்து
தாராள பணவரவு பெறுவர்.
அரசியல்வாதிகள்:
கூடுமானவரை ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உரிய பணிபுரிவீர்கள்.
உங்களது நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இருப்பினும்
சிலருடன் மனத்தாங்கல் ஏற்படும். பிறர் விவகாரங்களில் தலையிட்டு சமரசம்
செய்யும் முயற்சியை பெருமளவு குறைத்துக் கொள்வதால் நலம் உண்டு.
புத்திரர்கள் அரசியல்பணியில் உறுதுணையாக செயல்படுவர்.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான அம்சங்களை பெறுவதற்கு காத்திருக்கும் நிலைமை
ஏற்படும். இருப்பினும் மகசூல் திருப்தியாக இருக்கும். கால்நடைகள்
பராமரிப்பிற்கு கூடுதல் செலவு ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிலம்
வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நிறைவேறும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் முயற்சி முழு வெற்றி தரும்.
செல்ல வேண்டிய தலம்: பூவரசங்குப்பம்(விழுப்புரம்) லட்சுமி நரசிம்மர் கோயில்
பரிகாரப் பாடல்:
ஆடிப்பாடி அகங்கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி
நாடிநாடி நரசிங்கா என்று
வாடும் இவ்வாணுதலே.