கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
5:10 AM

Welcome Guest | RSS Main | துலாம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்

துலாம்

65/100 (பரவாயில்லை)


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3


எதிலும் துணிவுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, ராகுவும், பத்தில் கேது, பதினொன்றில் சனி என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. இந்தவருடம் உங்களுக்கு சனிபகவான் மட்டுமே நற்பலன்களை தாராளமாக வழங்கும் விதத்தில் உள்ளார். சனிபகவானுக்கு பிரியமான நீதி, நேர்மை, நியாயம் குணங்களை பின்பற்றி வாழ்வில் பல வளங்களையும் பெறுவீர்கள். இத்துடன் குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்கள் வழியாகவும் உங்களுக்கு நல்ல பலன் வந்து சேரும்.


உண்மைக்காக குரல் கொடுப்பீர்கள். சகோதரர்களின் வாழ்வு வளம்பெற இயன்ற உதவி புரிவீர்கள். சமூகத்தில் உள்ள மதிப்பு உயரும். அதிக பழக்கம் இல்லாத எவருக்கும் வீட்டில் இடம் தரக்கூடாது. தாயின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். சிலர் பணி நிமித்தமாக வெளியூருக்கு மாற்றலாகி செல்லும் நிலை உண்டு. புத்திரருக்குப் படிப்பில் இருக்கும் தயக்கத்தை நிவர்த்திசெய்து அவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற உதவுவீர்கள். பூர்வீக சொத்தில் வருமானம் மிதமான அளவில் மட்டுமே கிடைக்கும்.


உடல்நலம் சீராக இருக்க நல்ல பழக்க வழக்கமும் ஊட்டம் தரும் உணவு உண்பதும் அவசியம். எதிரியின் நடவடிக்கை புரியாத புதிர் போல இருந்தாலும் உண்மையின் வெற்றி உங்களை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமை சிறந்து உறவினரிடம் நன்மதிப்பு பெறும். விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. நியாயமான எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் சில தொந்தரவுகள் வந்து விலகும். கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் நல்ல நண்பரையும் இனிய அனுபவத்தையும் பெற்றுத்தரும். இந்த வருடம் நடக்கும் குரு, சனி, ராகு-கேது பெயர்ச்சிகளில் ராகு மிகுந்த அனுகூல பலன்களை தருவார். இதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழில்வளர்ச்சி அதிகரித்து அதிக பணவரவு கிடைக்கும். சுக சவுகர்ய வாழ்வு பெறுவீர்கள். பசு, பால் பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.


தொழிலதிபர்கள்: மினரல் வாட்டர், பம்ப் செட், உரம், பெயின்ட், அழகு சாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர், விளையாட்டு சாதனங்கள், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் பொருள் உற்பத்தியை மேற்கொள்வர். லாபம் அதிகரிக்கும். மற்றவர்கள் கடும் போட்டியால் சுமாரான லாபமே பெற இயலும். வாகன பராமரிப்பு செலவு கூடும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் இருக்கும் குறைகளை சரிசெய்து இலக்குகளை நிறைவேற்றுவர். உங்களின் பொறுமையான நடவடிக்கை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து உரிய சலுகைகளை பெற்றுத்தர உதவும். எழுத்து, தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள் தகுதி திறமையை வெளிப்படுத்தி புகழும் ஆதாய பணவரவும் கிடைக்கும். புதியவர்களை நண்பராக ஏற்றுக்கொள்வதில் உரிய கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய பணச்செலவை விருப்பமுடன் மேற்கொள்வீர்கள்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, மினரல் வாட்டர், கம்ப்யூட்டர், மொபைல், அலங்கார பொருட்கள், சமையலறை சாதனங்கள், புத்தகம், மின்சார உபகரணங்கள், ஸ்டேஷனரி, தோல், கம்பளி, வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பூஜை பொருட்கள், காகித வியாபாரம் செய்பவர்கள் கனிவாகப் பேசினால் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியும். மற்றவர்களுக்கு வியாபாரம் சிறந்து பணவரவு அதிகரிக்கும். கூடுதல் மூலதனமும், அபிவிருத்தி பணியும் சிறப்பாக நிறைவேறும். கூடிய மட்டும் ரொக்கத்திற்கு விற்பனை செய்வது நல்லது.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து சிறப்புடன் செயல்படுவர். பணி இலக்கு இனிதாக நிறைவேறும். சக பணியாளர்கள் ஒத்துழைக்க மறுப்பர். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். சிக்கனம் மிக மிக அவசியம். புத்திரர்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்துவீர்கள். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு ஆபரண சேர்க்கை கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சீரான பணவரவை பெறுவர்.


மாணவர்கள்: சட்டம், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, அழகுக் கலை, சினிமா தொழில்நுட்பம், கேட்டரிங், மரைன் உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் மிகவும் கவனமாகச் செயல்படுவதால் மட்டுமே படிப்பில் தரதேர்ச்சி அதிகரிக்கும். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். சக மாணவர்கள் படிப்பு வளர உதவுவர். படிப்புக்கான பணம் கிடைப்பதில் தடங்கல் ஏற்படும்.


அரசியல்வாதிகள்: புதிய மாற்றம் ஏற்படும். நீதி, நியாயத்தில் நம்பிக்கை வளரும். ஆதரவற்றவர்களை வாழ்வில் உயர்த்த பாடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கைகள் பெருமளவு நிறைவேறும். ஆதரவாளர்கள் உங்களிடம் அதிக நம்பிக்கை கொள்வர். வெகுநாள் எதிர்பார்த்த பதவிபொறுப்பு கிடைக்கும். புத்திரர்களின் உரிமைகளை மதித்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாவர். பொது விவகாரங்களில் இதமுடன் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள்.


விவசாயிகள்: கூடுதல் உழைப்பால் பயிர் வளர்ப்பில் அதிக மகசூல் பெறுவர். பணவரவு சீராக கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக பாதுகாப்புடன் செயல்படவும். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூலம் பெற சனிபகவானின் அருள்பார்வை துணைநிற்கும்.


கலைஞர்கள்: தொழில் போட்டி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளைப்பெற நண்பர்கள் உதவுவர். நடைமுறை வாழ்வுக்கு தேவையான பணவரவு கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்


பரிகாரப் பாடல்:


அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்


வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில்


ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்


முருகாவென்று ஓதுவார் முன்.

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz