கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
7:32 PM

Welcome Guest | RSS Main | கன்னி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்

கன்னி

60/100 (நம்பிக்கை)


உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2


உழைப்பே உயர்வு என்பதில் நம்பிக்கையுள்ள கன்னிராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு, ராகுவும், பதினொன்றில் கேது, பன்னிரெண்டில் சனி என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. உங்கள் ராசிக்கு குருவும், கேதுவும் இந்த வருடம் மகிழ்ச்சி தரும் இனிய நற்பலன்களை தாராளமாக வழங்குவர். சனி சுபவிரயச் செலவுகளையும், ராகு சிறு தொந்தரவுகளையும் தருவர். மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்புரிந்து வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாகும். நியாய உணர்வுடன் நடந்து சமூகத்தில் நற்பெயர் அடைவீர்கள்.


வீடு, வாகன வகையில் தேவைப்படும் வளர்ச்சி மாற்றத்தை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தாயின் அன்பும் ஆசியும் பலமாக கிடைக்கும். புத்திர ஸ்தானத்தில் குரு இருப்பதால் அவர்கள் விரும்பிய பொருட்களை மனமுவந்து வாங்கித்தருவீர்கள். ஆனாலும், இதே இடத்தில் ராகு இருப்பதின் காரணமாக புத்திரரின் நடைமுறை செயல்பாடு, சேர்க்கை சகவாசங்களையும் கண்டறிந்து வழிநடத்துங்கள். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு பெறுபவர்கள், அதன் பயன்பாடு, விவகாரம் இல்லாத தன்மை அறிந்து வாங்குவது நலம் தரும். உடல்நலம் பலம் பெறும். எதிரிகளை சமயோசிதமாக வெற்றி கொள்வீர்கள்.


நிலுவைக் கடன்பாக்கிளை ஓரளவு அடைப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை விமரிசையாக நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்புடன் இருக்க ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்பட வேண்டும். குடும்பத்திற்காக தாமே அதிகமாக உழைக்கிறோம் அல்லது கஷ்டப்படுகிறோம் என்கிற மனநிலை வளரும். இதனை தவிர்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்.


நண்பர் நல்லவராகவே இருந்தாலும் அவரின் புதிய நட்பு சேர்க்கை உங்களையும் சிரமத்திற்கு உட்படுத்தும். கவனம் தேவை. நடைமுறை வாழ்வுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கே பெறுவீர்கள். திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சார்ந்த வகையில் உங்கள் முயற்சியின் திறமை பரிமளிக்கும். இதனால் தொழில் சிறந்து தாராள பணவரவு பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்புடைய பணிகளுக்கு தாராள பணச்செலவு செய்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் அளவுடன் பேசுவது உரிய மதிப்பை பெற்றுத்தரும். ஆண்டின் முற்பகுதி சுமூகமாக கழிந்தாலும், செப்டம்பருக்குப் பிறகு நடக்கும் சனி, ராகு-கேது பெயர்ச்சிகள் உங்கள் ராசிக்கு சில சோதனைகளைத் தரும். எனவே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செயல்களில் நிதானம் அவசியம்.


தொழிலதிபர்கள்: இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ் அதிபர்கள், கல்வி, தொழிற்பயிற்சி நிறுவனம், நிதி நிறுவனம் நடத்துபவர்கள் தொழில் வளம் சிறந்து தாராள பணவரவை பெறுவர். மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுமாரான லாபமே கிடைக்கும். அலங்கார பொருட்கள், மருத்துவ உபகரணம், மருந்து பொருட்கள், கம்ப்யூட்டர், தோல், காலணி, வாசனைத் திரவியம், உணவு பண்டங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர்கள் அதிக உற்பத்தியும் கூடுதல் லாப விகிதமும் பெறுவார்கள். கூடுதல் மூலதனத்துடன் தொழில் அபிவிருத்தி பணிகளையும் சிறப்புற மேற்கொள்வர். அனுசரணை நிறைந்த பணியாளர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது தகுதி, திறமையைச் சரியாக பயன்படுத்தி பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். சக பணியாளர்களுடன் அளவான நட்பு இருக்கும். கல்வி நிறுவனம், இயந்திர தொழில்நுட்பம் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் நிர்வாகத்திற்கு கூடுதல் பணவரவை உருவாக்கி அதிக சலுகைகளைப் பெறுவர். சக பணியாளர்களிடம் கொடுக்கல், வாங்கல் வேண்டாம்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், உணவு பண்டங்கள், இசைக் கருவிகள், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், ஸ்டேஷனரி, பர்னிச்சர், பழம், காய்கறி, இறைச்சி, மளிகை, பெயின்ட், மருந்து, மருத்துவ உபகரணங்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் தொழில்வளம் சிறந்து ஆதாய பணவரவு பெறுவர். அதிகமாக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். புதிய சரக்கு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்கால தேவைகளுக்காக பணம் சேமிப்பீர்கள்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது உத்வேக செயலால் பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம், சம்பள உயர்வு தாராளமாக கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்ப செலவுக்கான பணத்தை ஓரளவு பெற்றாலும் செலவு அதிகரிப்பால் திண்டாடுவர். கணவரின் எண்ணங்களுக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை வளரும். புத்திரர்களின் எதிர்காலம் குறித்த கவலை வளரும். சுயதொழில் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சி பணியை நிறைவேற்றுவர். தொழில் சிறந்து கூடுதல் பணவரவு கிடைக்கும். சக தொழில் சார்ந்த எவருக்கும் சரக்கு கொள்முதல் இடங்களில பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது.


மாணவர்கள்: வங்கியியல், தணிக்கையியல், வணிகவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், மரைன், சிவில் இன்ஜினியரிங், ஓவியம், இசை, இலக்கியம், ஜர்னலிசம், கம்ப்யூட்டர், ஆராய்ச்சி துறை மாணவர்கள் படிப்பில் சாதனை புரியும் எண்ணத்துடன் செயல்படுவர். அதிக தரதேர்ச்சி கிடைக்கும். படிப்புக்கான பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு தகுதி வாய்ந்த வேலை கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: மனதில் புத்துணர்ச்சியுடன் சேவைப்பணியை மேற்கொள்வீர்கள். சமூகத்தில் வரவேற்பும் அந்தஸ்தும் கூடுதலாக கிடைக்கும். புதிய ஆதரவாளர்கள் சேர்க்கையும் அவர்கள் உங்களிடம் அதிக நம்பிக்கை கொள்வதுமான சுபபலன் உண்டு. எதிர்பார்த்த பதவி பொறுப்பு எளிதாக கிடைக்கும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணி சிறக்க உதவிகரமாக செயல்படுவர். எதிரிகள் தரும் தொந்தரவு பலமிழக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் முயற்சியால் மட்டுமே தொழில் வளர்ச்சியை பெருக்கலாம்.


விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நிறைவேறும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் அபிவிருத்தி உண்டு. தாராள பணவரவு பெறுவீர்கள். கூடுதல் நிலங்கள் வாங்கவும் அனுகூல வாய்ப்பு பலமாக உள்ளது.


கலைஞர்கள்: ஆரோக்கிய உடல்நலத்துடன் செயல்பட்டு பணியில் திறமையை வளர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தமும் தாராள பணவரவும் கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: ரங்கநாதர்


பரிகாரப்பாடல்:


ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்

இன்று மறப்பனோ? ஏழைநான்- அன்று


கருவரங்கத்துள் கிளந்து கைதொழுதேன் கண்டேன்


திருவரங்கமேயான் திசை.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz