கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-06-15
1:04 AM

Welcome Guest | RSS Main | கடகம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 11
Guests: 11
Users: 0

ஆண்டுபலன்

கடகம்

70/100 (நன்மை)


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்


செயல்களின் பின் விளைவை உணர்ந்து நடக்கும் கடகராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, ராகுவும், ராசியில் கேது, இரண்டில் சனி என்கிற வகையில் கிரக நிலை உள்ளது. குருபகவான் "குரு சந்திர யோக' அமைப்பில் உங்களுக்கு மிகுந்த நற்பலன் தரும் வகையில் உள்ளார். மனதில் தெய்வீக நம்பிக்கை வளரும். ஆன்மிக நற்கருத்துக்களை வாழ்வில் பின்பற்றி நன்மை பெறுவீர்கள். பேசும் வார்த்தையில் தன்னடக்கம் மேற்கொள்வதால் மட்டுமே சிரமம் தவிர்க்கலாம். பொதுப்பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர்.


வீடு, வாகன வகையில் இப்போதைய நிலை தொடரும். புத்திரர்கள் சுய அறிவுத்திறன் வளர்க்கும்பொருட்டு உங்களிடம் பலவித கேள்விகளை கேட்பர். பொறுப்புடன் நீங்கள் பதில் சொல்வதால் அவர்களின் கல்வித்திறன் வளர்ச்சி பெறும். அவர்களது உடல்நலம் பேணுவதில் கவனம் வேண்டும். எதிரிகளால் தொல்லை இருக்கும். பொறுமை தேவை.


தாயின் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். நிதிநிலை நன்றாக இருக்கும். ஏற்கனவே உள்ள கடனை சரிசெய்வதிலும், பணம் சேமிப்பதிலும் கவனம் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம். உங்களின் திறமையை பயன்படுத்தி ஆதாயம் பெற புதியவர்கள் சிலர் நட்பு பாராட்டுவர். அவர்களது தரம் அறிந்து பழகுவது நல்லது. கண்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை உரிய வகையில் மதித்து செயல்படுவதால் மட்டுமே ஒற்றுமை நிறைந்த வாழ்வு மலரும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிதரும் புதிய வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி அதிக வெற்றிபெறுவீர்கள். வெளியூர் பயணத்தின் போது பொருட்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் அவசியம். ஏழரைச்சனி செப்டம்பர் 25ல் உங்களை விட்டு விலகுகிறது. இதன் பிறகு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்கள் செயல்கள் வெற்றிகரமாகும். சுக சவுகர்ய வாழ்வும், பசு பால் பாக்கியமும் பெற்றுத்தரும். அக்டோபர் 29ல் நடக்கும் பெயர்ச்சியாகும் ராகு எதிரிகளை வெல்லவும், ஆதாய பணவரவைப் பெறவும், உடல் ஆரோக்கியம் தரும் வகையிலும் நற்பலன் வழங்குவார்.


தொழிலதிபர்கள்: பம்ப்செட், மினரல் வாட்டர், உழவுகருவிகள், எரிவாயு அடுப்பு, உணவு பண்டம், படகு, வலை, பர்னிச்சர், பீங்கான் பொருட்கள், குளிர்பானம், கொதிகலன்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், கம்ப்யூட்டர், செல்போன், இரும்பு பொருட்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூடுதல் தரத்துடன் பொருட்களை உற்பத்தி செய்துபுதிய தொழில் ஒப்பந்தங்களை பெறுவர். தாராள பணவரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு லாபம் அதிகமிருந்தாலும் உற்பத்தி, நிர்வாக பணச்செலவு சிறிதளவு கூடும். தொழிலில் புதிய நுட்பங்களை புகுத்த சிலர் வெளிநாடு சென்று வரவும் வாய்ப்பு உண்டு. தொழிலில் வரும் போட்டியை உரிய வகையில் எதிர்கொண்டு சரிசெய்வீர்கள்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, பாத்திரம், எண்ணெய், நறுமண பொருட்கள், உணவு தானியங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், பால் பொருட்கள், மீன், இறைச்சி, மூலிகை மருந்து, பிளாஸ்டிக், ரப்பர், தோல் பொருட்கள், பண்டங்கள், அலங்கார பொருட்கள், காய்கறி, பழம் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் பெறுவர். மற்றவர்கள் தேவைக்கேற்ப பொருள்களை கொள்முதல் செய்வதால் லாபத்தின் அளவை உயர்த்திக் கொள்ளலாம். சரக்கு வாகன பராமரிப்பு பணச்செலவு அதிகரிக்கும். தொழிலில் உருவாகும் போட்டியை புதிய யுக்தியால் சரிசெய்து வளர்ச்சி பெறுவீர்கள்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இடங்களில் அனுகூல சூழ்நிலை அமைந்து பணியை திறம்பட நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் உங்களைப்பற்றிய நன்மதிப்பு அதிகரிக்கும். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை சிலருக்கு எளிதாக கிடைக்கும். சக பணியாளர்களுடன் பணம் கொடுக்கல், வாங்கலில் அதிருப்தி ஏற்படும். சிலருக்கு சுயதொழில் துவங்கும் முயற்சி திட்டமிட்டபடி கைகூடும். தொழில்நுட்ப பணி சார்ந்தவர்களுக்கு பணிபுரிய தேவையான கூடுதல் வசதியும் உரிய பயிற்சியும் நிர்வாகத்தினால் வழங்கப்படும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். பணி இலக்கு பூர்த்தியாகும். பணியில் உடன் பணிபுரிபவர்களின் குறுக்கீடு வராத அளவிற்கு செயல்படுங்கள். இதனால் குளறுபடி வராத நன்னிலை பெறலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வர். பணவசதி சீராக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். ஆபரண சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் கணவர் மற்றும் தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்புக்களை பெறுவர். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.


மாணவர்கள்: மருத்துவம், மெக்கானிக்கல் இன்ஜனியரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், சட்டம், விவசாயம், கேட்டரிங், மரைன், ஏரோநாட்டிக்கல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் தரதேர்ச்சி அதிகரிக்கும். மற்றவர்கள் மிகச்சிறப்பாகப் படிப்பார்கள். படிப்புக்கான பணவசதி ஆண்டின் பிற்பகுதியில் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் அதிக செல்வாக்கை பெற ஆர்வமுடன் சேவை புரிவீர்கள். நற்பெயரும் புகழும் அதிகரிக்கும். எதிரிகளின் செயல்களை சமயோசிதமாக முறியடிப்பீர்கள். அரசு அதிகாரிகளும் இணக்கமுடன் நடந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவர். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவியும் ஈடுபாடும் சுமாராக இருக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கிடைக்கும் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியும் எதிர்பார்த்த பணவரவும் பெறுவர்.


விவசாயிகள்: சராசரியான மகசூல் கிடைக்கப்பெறுவர். கால்நடைகளின் பாதுகாப்பில் கவனமுடன் இருக்க வேண்டும். நடைமுறை வாழ்வுக்கு தேவையான பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு பெற கூடுதல் செலவு செய்யும் நிலை உள்ளது.


கலைஞர்கள்: கூடுதல் முயற்சியினால் தொழில் வாய்ப்புகளை பெறுவர். தொழில் போட்டி அதிகரிக்கும். பிற தொழில் சார்ந்த நண்பர்களின் உதவியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.


பரிகாரப் பாடல்:


யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார்


மான மணிவண்ணன் மாமருகன்- மேல் நிகழும்


வெள்ளக்குமிழி மதத்து விநாயகன் என்


உள்ளக்கருத்தின் உளன்

Login form

Search

Calendar
«  ஆணி 2025  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz