கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:02 AM

Welcome Guest | RSS Main | தலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர
 
 
சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலாம்.



கருகருவென்று கூந்தல் வளர!
 
 
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

செம்பட்டை கூந்தல் கருகருவாக எளிய குறிப்பு
 
 
உளுந்தம் பருப்பு ஒன்றரைத் தேக்கரண்டியையும், 15 எண்ணிக்கை கொண்ட கருவேப்பிலைகளையும் எடுத்துக்கொண்டு, இதனை புளித்த மோரில் ஊரவைத்து அறைக்க வேண்டும்.

இப்படி உருவாக்கிய பேஸ்டை, நாள்தோறும் ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையில் தலையில் தேய்த்து உலர்த்திய பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்துவர, செம்பட்டை கூந்தல் விரைவில் கருகருவாகும்.


கூந்தல் அழகாக இருப்பதற்கு
 
 
வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தடவி ஊறவிட்டு, பாசிபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவிட்டு அத்துடன் வேப்பிலைகளையும் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் தலைமுடி மென்மையாகவும், பொடுகுத் தொல்லையின்றி அழகாகவும் மாறிவிடும். செயற்கையான ஷாம்புவைவிட இது மிகவும் நல்ல பலனைத் தரும்.

கருமையான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி உபயோகிக்கலாம்.


கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
 
 
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

கூந்தல் அழகாக இருப்பதற்கு
 
 
வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தடவி ஊறவிட்டு, பாசிபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவிட்டு அத்துடன் வேப்பிலைகளையும் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் தலைமுடி மென்மையாகவும், பொடுகுத் தொல்லையின்றி அழகாகவும் மாறிவிடும். செயற்கையான ஷாம்புவைவிட இது மிகவும் நல்ல பலனைத் தரும்.

கருமையான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி உபயோகிக்கலாம்.







Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz