சில பெண்களின் கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.
இந்த கருவளையங்கள் ஏற்படக் காரணம் என்ன?
பரம்பரைத் தன்மை, சரியான அளவு தூக்கமின்மை, இரத்த சோகை, சத்தில்லாத
ஆகாரம், கண்களுக்கு அளவுக்கதிகமாக வேலை கொடுப்பது, உடல் நலத்தில் ஏதாவது
கோளாறு என கருவளையங்கள் தோன்ற ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
எனவே, கருவளையம் ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு எந்த காரணத்தினால் இது
ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளித்தால்
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகும்.
கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க :
இரவு
படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை
வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும்.
வைட்டமின் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம்,
சுருக்கம் நீங்கும். மாதம் ஒரு முறை பேஷியல் செய்வது நல்லது.