அண்ணா அண்ணாவென்ற குரல்
ஆண் - வன்னியில் இருந்தொரு
தொலைபேசி அழைப்பு.
அண்ணா அண்ணாவென்ற - குரலில்
தங்கையின் பாசத்துடிப்பு!
பெண் - சாவுடனே நாங்கள் - தினம்
வாழுகின்றோம் அண்ணா.
தப்பேதும் செய்யாமலே - சிங்களத்தின்
குண்டில் மாழுகின்றோம் அண்ணா!
வன்னியில்
கொடும்பசி வாட்டியெம்மை
புரட்டி வதைக்கின்றது.
சிங்களவன் ஏவும் செல்களும் - எம்மை
நாளும் துரத்திக் கொல்கின்றது!
அந்நியச்சேனை வந்து - கிந்தியில்
பேசியெம்மைக் கொல்கின்றது.
யாரிடம் சொல்வோம் அண்ணா
எம்துயரத் துன்பியல் நாளேட்டை!
வன்னியில்
இன்றுநான் உன்னோடு
பேசுகின்றேன் அண்ணா.
நாளைபேச நான் - உயிருடன்
இருக்கமாட்டேன் அண்ணா!
அண்ணா இதுதான் உங்களோடு - நான்
பேசும் கடைசிவார்த்தை.
செல்வந்து விழுகின்றது - நான்
அம்மாவுக்கு அருகில் போகின்றேன் அண்ணா!!!
கோவையூர் செ.சர்வன்