பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் அவனியிலே சிறந்தது" என்ற கொள்கையில் நீ நின்றாய் எமக்காய் நீள்துயில் கொள்ளும் செல்வமே எங்கள் தாசன்(விதுரன்)
விநாடிகள் சிலதில் வீழ்ந்த எம் செல்வம மண்ணுக்கு வித்தான மகத்துவம் தான் என்ன மார்பு தட்டும் தமிழ்மக்கள் மத்தியில் நீ நின்று மகத்தான வித்தானதுதான் என்னவோ?
கற்பகமே கருமணியே காவியனே அருமருந்தே பாசத்தின் உறைவிடமே தேசத்தின் மைந்தனே தமிழின் உயிரே தாயின் நேசனே தந்தையின் மைந்தனே உடன் பிறப்பின் ஆருயிரே
உன்மேல் ஓர் துரும்பு பட்டாலும் துயர்கொள்வோம் உனையிழந்த துயர் எம்மை பாடாய்ப் படுத்துதடா நீமறைந்த செய்தி கேட்டு எமை மறந்து நாம் துடித்தோம் சுகபோகம் நீ துறந்தாய் மண்ணுக்காய் உனை ஈர்த்தாய் தாய்நாட்டை மீட்கவென்றே தாயுடனே நின்றுகொண்டாய் இன்று உனைப் பிரிந்துவிட்டோம் செய்த பாவம் நாமறியோம்
கதறுகிறோம் வாடா... எம் செல்வமே வாடா உன் சாவு பொய்க்காதோ என்று ஏங்கித் தவிக்கின்றோம் நீ செய்த தமிமண்ணும் நீ செய்த தமிழ் வீடும் எம் தாசன் இல்லையென்றால் தாங்காது என் தேசம்
பண்பின் ஒளிவிளக்கே பாசத்தின் உறைவிடமே ஒழுக்கத்தின் காவலனே தேசத்தின் நேசனே மண்ணின் மைந்தனே இலட்சியப் பிறப்பே உன் சொர்ப்பணம் நாளை நிச்சயம் மெய்க்குமடா...!!!