மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள் இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே!
உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மையுடன் நடந்திடுவாய்.
ஈராண்டு கடந்தும்கூட – நீ இன்றுவரை என்மனதில். உன் மீளாத் துயிலென்பது- நான் காணும் கனவாகவே உள்ளது- ஏனெனில் நீ கதைத்த கதை என் காதுகளில் இன்றுவரை ஒலிக்கிறது உனது அழகான புன்னகை என் கண்களில் தெரிகிறது நீ ஏவிய அன்பாணை என் இதயத்தைத் துளைக்கிறது- ஏன் உனது தொலைநகல் விலாசம்கூட இன்றும் என் கோப்புக்குள்- அதை அழிக்கவோ மனம் மறுக்கிறது- ஏனெனில் நீ இன்னொருமுறை கதைப்பாயெண்ட நப்பாசையில்.
யார்மனதும் புண்படாமல் அன்புடனே அரவணைத்து அன்பினினால் முடித்திடுவாய் உன்செயலை- அப்பொழுதே நான் கண்டேன் உன்னிட்த்தில் மடியொன்று- அதையே! ஏதுமறியா குழந்தைபோல்- உன் மடியும் நிலைத்திடுமென நானெண்ணி இருக்கையிலே! திடுமென நீ மறைந்த செய்தி என்மார்பினைத் துழைத்ததேனோ!!!