தமிழா ! உன் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் தாயக மண்ணில்-தினமும் தமிழரின் உடல்கள் விதைக்கப்படுகிறன உயிர்கள் வதைக்கப்படுகிறன பச்சிளம் சிசுவோ பட்டினியில் துடிக்கிறது பள்ளி நாட வேண்டிய வயது பதுங்கு குழி தேடுறது வானத்தை பார்த்தாலே எறிகணை மழைகள் ஒரு நொடி உற்று நோக்க உயிர் கூட போகிறது
சட்டத்துக்கு புறம்பான கனரக ஆயுதம் ஒருபுறம் வெளிநாட்டு இராணுவம் மறுபுறம் அந்நியனின் முறைகேடான ஆக்கிரமிப்பே- எம்மண்ணில் அவலத்தை தோற்றி அழவைக்கிறது - இன்று அழுத விழியில் ஈரமுமில்லை அழுகுரல் கேட்டு அணைப்பவர் யாருமில்லை
உதவிக்காக பிறந்த அமைப்புகள் உலகத்தில் உள்ளதாம் அதுவெல்லாம் இப்போது காணாமல் போகும் கானல் நீராகியதாம் அமெரிக்காவின் பேச்சுக்கூட அடங்கி போனதாம் ஐ.நா வின் குரல்கூட அர்த்தமற்று போனதாம் மனித உரிமைகள் கூட மனித நேயம் இழந்ததாம்
இந்த உலக சட்டங்கள் கூட இருட்டறை ஆகிவிட்டது தமிழினத்தை உற்று நோக்க பொய் வேஷம் போடுகிறது எதற்காக இந்த மௌனம் எவருக்குமே புரியவில்லை
தமிழரின் உணர்வலைகள் ஒருபோதும் அழிக்கமுடியாதவை இந்த உலகின் மௌனம் கலைக்கப்படும் வரைக்கும்இ உலகத்தமிழா.........! உன் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்! உன் தமிழீழம் மலர்ந்திடும் வரைக்கும்..........