வாழ்கையில் வெற்றி பெற 
அறிவாளி,வாய்ப்புகளை 
பயன்படுத்தி கொள்வான்.
புத்திசாலி வாய்ப்புகளை 
உருவாக்கிக் கொள்வான்!
கடவுளை நம்பு! 
அனால், 
கடவுளை மட்டுமே 
நம்பிக்கொண்டு இருக்காதே!
நாளை வரப்போகும் 
இன்ப துன்பம் அனைத்தும் 
நேற்றில் அடங்கியது!
நாளை நமக்காக 
காத்து  இருக்கிறது!
சோர்வை அகற்றி 
நம்பிக்கை வளர்ப்போம்!
விரும்பியதை செய்வது 
சுகந்திரம்! 
செய்வதை விரும்புவது 
சந்தோசம்!
  
நமது தோற்றம் எதிரே 
இருப்பவரின் கண்களை கவரும்;
நடத்தை இதையத்தை கவரும்.
வழியைக் கண்டுபிடி!
அல்லது 
உருவாக்கு!
நாளை, நாளை என்று 
எந்த ஒரு செயலையும் 
ஒத்தி போடுவது 
வெற்றிக்கு தடையாகும்!
கவலை 
நாளைய துயரங்களை 
அழிப்பதில்லை!
இன்றைய வலிமையை 
அழித்துவிடும்!
பூனை கருப்ப,
வெள்ளையணு கவலைப்படாதே...
அது எலியைப் பிடிக்கிரதானு 
மட்டும் பாரு!
சொர்க்கமோ, நரகமோ 
நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய 
இடங்கள் அல்ல; நாமே உருவாக்கி 
கொள்கிற இடங்கள்!
வீழ்வது வெட்கமல்ல....
ஆனால்,
வீழ்ந்தே கிடப்பது தான் 
வெட்கம்.
துணிவுடன் வாழ்க்கையில் 
எதையும் செய்-அதன் 
தன்மையில் புது அர்த்தங்கள் 
மலரும்!
நம்பிக்கையுள்ளவர் 
ஒவ்வொரு சிரமத்திலும் 
ஒரு வாய்ப்பை காண்கிறார்! 
நம்பிக்கை இல்லாதவர் 
ஒவ்வெரு வாய்ப்பிலும் 
ஒரு சிரமத்தை காண்கின்றார்!
யாரும் உன்னை குறை கூறினால் 
அது உண்மையாயின் திருத்தி கொள்!
பொய்யாயின் நகைத்து விடு!
முயற்சிகள் தவறலாம்!
அனால்,
முயற்சிக்க தவறாதே!
 முடியும் வரை முயற்சி செய்!
உன்னால் முடியும்  வரை அல்ல!
நீ நினைத்த செயல் 
முடியும் வரை!
சோகம் எனும் பறவை 
உங்கள் தலைக்கு மேல் 
பறப்பதை தடுக்க இயலாது!
ஆனால், தலைக்கு மேல்
கூடு கட்டுவதை தவிர்க்கலாம்!
வாழ்க்கையில் நீ சந்திக்கும் 
ஒவ்வெரு மனிதனும் 
உனக்கு ஆசான்!
அவர்களிடம் நீ கற்றுக்கொள் 
ஏதேனும் ஒன்று இருக்கும்!
முயல் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!
முயலாமை வெல்லாது!
		
	


