நிலா முற்றம்
சிநேகிதா!நான் காதலித்த போது!
என்னைவிட உன்னைபற்றிதான்
அவளிடம் அதிகமாக கூறியிருக்கின்றேன்!
சினேகிதா!
நான் தோல்வி அடைந்த போது!
என் தோல்விகளை விட உன் வெற்றிகளைத்தான்
அதிகமாக நினைத்துக்கொண்டேன்!
சினேகிதா
நான் வெற்றி பெற்ற போது!
என் மகிழ்ச்சியை விட உன்
சிரிப்பினில் தான் அதிகமாக மகிழ்ச்சியடைந்தேன்!
சினேகிதா!
நான் துன்பப்பட்ட போது!
என் துயரத்தைவிட உன்
கண்ணீரில் தான் வேதனை அதிகம் கண்டேன்!
சினேகிதா!
நான் தனிமைட்ட போதும்!உன்
பிரிவை விட எம் நட்பின் நெருக்கத்தில் தான்
இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்!
சினேகிதா!
நாம் மறைந்துவிட்ட போதும்!
மரணித்துபோகாத நட்பின் சுவாசத்தில்
வாழ்ந்துகொண்டே இருப்போம்!
கவிப்பூக்களாக ந்மது நிலா முற்றத்தில்!