"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவதுநெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமானகம்பிவட தொழில் நுட்பத்திற்குஅடுத்தகட்டமாக இந்தகம்பியற்றஇணைப்புத் தொழில்நுட்பம் தற்போதுவெகு வேகமாகபரவலாகிவருகிறது.
முறையான பாதுகாப்பு,தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
இந்த
மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம்
தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்ததொழில்நுட்பத்தைஉருவாக்கிய Wi-Fi அலையன்ஸ்நிறுவனத்தின்கணிப்பின்படிதற்போது Wi-Fi தொழில்நுட்பத்திற்கானஇந்தியசந்தை 270 மில்லியன்டாலர்கள். 2011-12ஆம்ஆண்டுவாக்கில்இது 900 மில்லியன்டாலர்கள்சந்தையாகவளர்ச்சியடையும்.
கெட்டநோக்கத்துடன்அணுகுதல், இதில், ஹேக்கர்கள்ஒருபொய்யானஅணுகல்இடங்களிலிருந்துதாங்கள்உருவாக்கியஒயர்லெஸ்கருவிகள்மூலம்எந்தஒருநெட்வொர்க்கையும்ஆட்கொண்டு, அதன்வழிசெல்லும்தகவல்களைதிருடுவது.