தொண்டர் 1: கட்சியிலே சேர்ந்தா 
 தலைவர் சில சலுகைகள் தருவதா சொன்னாரே... என்ன சலுகைகள் தரப் போகிறார்?
 தொண்டர் 2: சின்ன வீடு வைத்துக் 
 கொள்ள அனுமதி தரப் போகிறாராம்...
 
JJJJJ
  ஒருவர்: 
 தலைவருக்கு இருந்தாலும் நம்ம மேலே இவ்வளவு அவநம்பிக்கை கூடாது...
 மற்றவர்: என்ன பண்ணினார்...?
 ஒருவர்: 
 பத்தாயிரம் பணமுடிப்பு தந்தோம்.அங்கேயே அவிழ்த்துக் கொட்டி எண்ணிக் கொண்டு 
 இருக்கிறார்.
JJJJJ
  ஒருவர்: தலைவருக்கு பட்டம் கொடுக்கப் போறாங்களாமே...என்ன 
 பட்டம்...?
 மற்றவர்: 
 ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ தலைவர்...ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்க...
 
JJJJJ
 
  ஒருவர்:
 தலைவரை மட்டும் விட்டு விட்டு ஏன் எல்லோரும் வேறு கட்சிக்குப் போய் விட்டீர்கள்...?
 மற்றவர்: தலைவர் எங்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்குப் போக இருந்தார்...அதனால்தான்...
JJJJJ
  ஒருவர்:
 தலைவர் மேடையிலே பேசும் போது திடீர்னு உளற ஆரம்பித்து விட்டாரே...
 மற்றவர்: 
 யாரோ , சோடாவிலே சாராயத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம்...
JJJJJ
  ஒருவர்:மறைந்த 
 தலைவருக்கு கட்சிக்காரர்கள் சென்ற ஆண்டுதானே நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். 
 இந்த ஆண்டும் கொண்டாடுகிறார்களே...
 மற்றவர்: இவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எதிரிக் கட்சியினர்.
JJJJJ
  தொண்டர் 1:
 கட்சியிலே நான் அடிமட்டத் தொண்டனா இருந்தேன்...
 தொண்டர் 2: இப்ப...?
 தொண்டர் 1:
 அடிபட்ட தொண்டனா இருக்கிறேன்.
 
JJJJJ
 
  தலைவர்:
 மக்களுடைய குறைகளைக் கேட்டால்தான் எனக்கு தூக்கம் வரும்...
 நண்பர்:
 உடனே தீர்த்து வைத்து விடுவீர்களா...?
 தலைவர்:
 இல்ல நான் குறையில்லாமல் இருக்கேன்கிற சந்தோஷத்துல தூங்கிவிடுவேன்.
 
JJJJJ
 
  ஒருவர்: 
 என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...?
 மற்றவர்: 
 ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து 
 கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்


