கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-07-13
9:15 PM

Welcome Guest | RSS Main | மொட்டைக் கடுதாசி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மொட்டைக் கடுதாசி

ஒரு அதிகாரி மேஜையில் வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாது தவித்தார். காரணம் அந்தக் கடிதங்களில் முகவரி எழுதாமல் வைத்திருந்தார். பியூனைக் கூப்பிட்டு, "மேஜை மீது வைத்திருந்த கவரைப் பார்த்தாயா? என்று கேட்டார்.

"அதுவா...! அதைத் தபாலில் போட்டு விட்டேன்" என்றான் பியூன்.

"தபாலில் போட்டு விட்டாயா? அந்தக்கடிதக் கவரில் விலாசம் எழுதவில்லையே!" என்றார்.

அதற்கு பியூன், "எனக்குத் தெரியும் சார்! நேற்று நம் அலுவலகத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே...அதற்குப் பதில் எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கும் அட்ரஸ் இல்லாமல் போகட்டும் என்று நினைத்துத் தபாலில் போட்டு விட்டேன்." என்றான் பியூன்.

உங்களுக்கு ஒண்ணுமே இல்லை

ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார்.

தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார்.

அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.

காணாமல் போன மனைவி

ஒருவன் வேகமாக தபால் ஆபீஸ் நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், "என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்." என்றான். 

போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்தது. "உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இங்கே வந்து ஏன் சொல்கிறாய்? என்றார்.

அதற்கு அவன், "எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது அங்கேதான் புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்" என்றான்.

தபால்காரர் போயிட்டாரா...?

ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.

Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz