சந்தித்தே தீருவோம்... உன்னை
நினைக்கும் போது என் இரு விழிகளையும் இறுக மூடிக் கொள்கின்றேன் - ஏனெனில்
என் நினைவுகளின் நிழல்களை உன் நிஜங்கள் மறைத்து விட வேண்டும்
என்பதற்காக.-என் கடந்த கால நினைவுகள் எவ்வளவு தூரம் என்னை
வேதனைப்படுத்துகின்றதோ அதேபோல் உன் நிகழ்கால நினைவுகள் என்னை எதிர் காலம்
நோக்கி நடைபோட வைக்கின்றது. சாதனைக்கான தூரங்கள் வேதனையைத் தரலாம்-ஆனால்
வேதனையின் முடிவில் தான் சாதனைகள் உருவாகின்றன. நாம் சந்தித்து
மகிழ்ந்திருந்த நாட்களை விடசந்திப்போமா என சிந்தித்த நாட்கள்தான் அதிகம்
அல்லவா வாழ்க்கையில் தோற்ற நாட்கள் அதிகமானால் வெற்றிகள் சொற்ப நாட்களில்
கிடைத்துவிடும் அதேபோல் நாம் சிந்தித்த நாட்கள் அதிகமாக இருப்பதால்
விரைவில் நாம் சந்தித்தே தீருவோம்