Site menu |
|
|
Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
|
தமிழனாய் தலை நிமிர்வோம்.
தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய் தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய் அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய் அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய் மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.
எத்தனை ஒப்பந்தம் எழுதிக்கிழித்தோமென்னும் நினைவுடனே என்னென்ன துன்பம் பட்டோமென்றும்- எத்தனைகாலம் என்னென்ன வகையில்ஏமாந்தோம் இழந்துபோனோமென்றும் என்றும் எதையும் மறவா நினைவுடனே எவரிடத்திலேயும் இனியும் ஏமாரும் நினைவுமின்றி செயலுமின்றி எதிலும் விழிப்புடனே வாழ்பவனே விழியுள்ள தமிழன்.
கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் வாயிருந்தும் ஊமையாய் வாழ்வதிலே என்னலாபம் ? மண்ணில்வாழும் காலத்தில் மானமின்றி வாழ்வதிலே அந்தவாழ்விலே என்னபலன்தான் உண்டு உலகத்திலே. தமிழன் என்றால் முதுகெலுப்பு வேண்டாமோ? -தமிழ்வழ தரணியிலே அரசொன்று வேண்டாமா? சிந்தியுங்கள்.
அடுத்தவன் முதுகிலே குதிரைஓட்டும் சில அங்கிடுதெத்தி அரசியல் வாதிகளை நம்பிடுவதோ தமிழன் இனியும்? எதிரிமுன் குனிபவனையெல்லாம் இனித்தமிழன் என்பதோ? தராசுபோல் தத்தளிக்கும் வாழ்வாகி தரணியிலே அரசின்றி தவிப்பவனாய் ஈழத்தமிழன் வாழலாமா இனியும்?
கவிவன்
|
|
Login form |
|
|
Search |
|
|
Calendar |
« பங்குனி 2024 » | ஞா | தி | செ | பு | வி | வெ | ச | | | | | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
|
|
Guest Register
|
|
|
|