விடுதலை...! ஓ... பெண்ணே உன் கூந்தலில் சூட்டி இருக்கும் மல்லிகையின் மணம் நான் ஆனால், என்னை விடுதலை செய்!
உன் கண்மணியில் என்னுடைய நினைவுகளே இருப்பின் விளக்கின் வியூகத்தில் வாழ முடியாது, என்னை விடுதலை செய்!
உன் குங்குமத்தில் ஜொலிப்பது நான் ஆனால், உன்னுடைய சந்திரன் யாரு? உன்னுடைய பூ மாலையில் என் உயிர் இருப்பின் நேற்று இறந்தவர் யாரு? நாளைக்கு இறக்கமாட்டேன் என்ற பயத்திலிருக்க முடியாது என்னை விடுதலை செய்!
என் பெயரில் களங்கம் வந்தால் தாங்கிக் கொள்ளாத நான் உன் பெயரின் முதலெழுத்தாக மாட்டேன். என்னை விடுதலை செய்!
என் இதயத்தை திறந்த புத்தகமாக வாழும் நான் உன் அந்தரங்க கணவனாக மாட்டேன் என்னை விடுதலை செய்!
யார் வீட்டோ மஞ்சள் குங்குமத்தில் நான் ஏலம் போகும் முன்னே என்னை விடுதலை செய்!
என்னவளின் தாலியில் உயிரோட்டம் பெற்ற நான் உன்னோட நெற்றியை அலங்கரிக்கும் குங்குமமாக இருக்க தகுதி இல்லாதவன் என்னை விடுதலை செய்