அன்னையே தெய்வம்…[02]
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன்
உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன்
*
அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா
பால் கொடுத்து என்னை வளர்த்தாய்
நீ தூக்கவே முடியாதளவுக்கு
*
வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள்
தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு
*
ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம்
நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது
*
எல்லாம் சேலைதான் எனினும்
நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது
*
என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட
நான் விழுந்து விடக்கூடாது என்ற கவனத்தில்தான் இருந்தது உன் தாய்ப்பாசம்
|