கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-04-25
9:42 PM

Welcome Guest | RSS Main | இலங்கையில் தமிழர்கள் அழிவதற்கு காரணம், தமிழ்நாட்டில் தமிழர் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே: இயக்குனர் சீம | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இலங்கையில் தமிழர்கள் அழிவதற்கு காரணம், தமிழ்நாட்டில் தமிழர் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே: இயக்குனர் சீமான்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009, 06:59.11 AM GMT +05:30 ]
இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம், தமிழன் இந்த தமிழ்நாட்டு மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை.  இவ்வாறு திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடக்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச போர் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப் போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்ற குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு நம் இனம்காக்க போராடவேண்டும் என்றார். 

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz