மனிதம் கொன்று... மனம் தின்று... ஈழம் இன்று...ஓர்...நடைபிணம் ! குண்டு வீசப்படும் போது முதலில் பிணம் விழுகிறது ! “கவனமாகக் காலை வையுங்கள் கண்ணி வெடிகள் இருக்கலாம் „ ! “பாதங்களைப் பார்த்து வையுங்கள் பிணங்கள் தட்டுப்படலம் „ ! “சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்து விட்டர்கள்„ ! “அரசியல் தீர்வு என்ன என்று பேசுகிறர்கள்„ ஆதனால் தானோ ?
எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமண் ஈழத்த்திற்க்கு மட்டும் ஏரோப்பிளேன் ஏறி வருகிறான் ! ஈழத்தமிழரிடத்தில் ஓட்டியிருப்பது உயிர் கொஞ்சம் தான் சொல்லிக் கொள்ள வேறு எதுவுமே இல்லை !
ஐ.நா என்றும் இன்னும் வேறு நிறுவன அதிகரிகள் என்று எல்லாம் வந்திறங்கிறார்கள் “எங்களை காப்பாத்த சோறு போடுங்க, எம் பிள்ளைகளைக் குணப்படுத்த கொஞ்சம் மருந்து கொடுங்க என்று மொழி தெரியாத மனிதரிடம் பிச்சை கேட்டு பிஞ்சுகளிலிருந்து முதியோர் (ஆண்-பெண்) என இருபாலரும் கதறி அழும் கோலம் „ !
சகிக்காது, பாம்புக்கடி, நாய்க்கடி, மலேரியா காய்ச்சல் என மறைந்தவர்களும் அதிகம் ! பால் வளம் இழந்ததை அறியுமா குழந்தை ? நமது சொந்தங்களே ! இனி நம் !
உலகில் வறுமைக்க்கு சோமாலியவை சொல்ல வேண்டியதில்லை ? குழந்தைகளுக்கு விருப்பமானது விமானம் பார்ப்பாது ஈழத்துக் குழந்தைகளுக்கும் அதுதான் எமண் ! வன்னி மண்ணில் 14 ஆயிரம் டன் குண்டுகளை வீசியது உண்மை !
சிங்களம் “உளவியல் யுத்தம் „ என உலகிற்க்குப் பொய்யான பரப்புரை ! இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா ? “நம் வீட்டில் சாவு விழுந்தல் அது அதிகபட்ச்சம் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டும் நம் மனச்சிறையில் உட்கார்ந்து கிடக்கும்„ !
அந்த சோகத்தை மெல்ல, மெல்ல மறைந்து விட்டு நாம் அடுத்த வேலைக்கு தாவி விடுவோம் ஆனால் நிமிஷத்துக்கு, நிமிஷம், நாள் கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தல் ! அழுவதற்க்கு நம்மிடத்தில் கண்ணீர் இல்லை !
அழுகை என்பது மனதின் தற்காப்பு ! உலகின் கண்களுக்கு எம் மக்களின் அழுகை தெரியவில்லையா ? அல்லது தெரிந்தும் தெரியாது போல் நடிப்பா ?