மௌனத்திற்கு பிறகு விடுதலை பெற்று கொண்டு வரும் உன் வார்த்தையை, உனது அந்த கொஞ்சலான கோபத்தை ரசிப்பதற்காகவே உன்னுடன் பல சண்டைகள் போடலாம் என் செல்லமே.. உன்னுடன் நான் போடும் சண்டை எல்லாம் உன் மௌனத்தை ரசிப்பதற்கு தான் என்பதை எப்படி சொல்லி புரிய வைப்பேன்..? மீண்டும் ஒரு முறை
சண்டையிடவா..?
*****
புல்வெளி நடுவே நாம் அமர்ந்து காதல் கொள்ளும் நேரம் நாம் பார்த்த அந்த இரண்டு வண்ணத்து பூச்சும் ஒன்றை ஒன்று சண்டையிட்டு கொண்டு சேர்ந்தவுடன் நான் உன்னை பார்த்ததும் நீ வெட்கப்பட்டு விலகி சென்றாயே..அதற்க்கு என்ன அர்த்தம்..?
*****
உன்னுடன் நான் சில்மிஷம் செய்துவிட்டு எழுந்து ஓடும் போது நீ என்னை துரத்தி கொண்டு வரும் போதெல்லாம்
நீ என்னை பிடிப்பதற்காகவே நான் எத்தனை முறை என்னை தோற்கடித்து இருக்கிறேன் தெரியுமா..?