ஆனி மாதம்
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் - 1
வெற்றியடைய கடுமையாகப் பாடுபடும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதன் சூரியன் ஆதாய ஸ்தானத்தில் புதனுடன் உள்ளார். ஜென்மச்சனியின்
தாக்கத்தைக் குறைக்கும் வகையில் கும்பத்திலுள்ள குருவின் பார்வை அனுகூலமாக
உள்ளது. எனவே, தொழில் மற்றும் குடும்ப வளர்ச்சித் திட்டங்களை ஆர்வமுடன்
செயல்படுத்துவீர்கள். பலவித நன்மைகள் கிடைக்கும். இனிதாக பேசி
புதியவர்களின் நட்பைப் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து கூடும். வீடு,
வாகன வகையில் பழுதுநீக்குதல் பணி மேற்கொள்வது அவசியம்.
புத்திரர்கள்
சுயதிறமையை வளர்த்து படிப்பிலும் சமூகத்திலும் சிறப்பிடம் பெறுவர்.
எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவு குறையும். வெகுநாள் எதிர்பார்த்த
நிலுவைப்பணம் வசூலாகும். உடல்நலம் பலம் பொருந்திய வகையில் திகழும். கணவன்,
மனைவி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உறவினர்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
தொழிலதிபர்கள் கூடுதல் உற்பத்தியும், ஆதாய பணவரவும் கிடைக்கப்பெறுவர்.
பணியாளர்கள்
தமது பணிக்குரிய அங்கீகாரமும் சலுகையும் அடைவர். வியாபாரிகள் கூடுதல்
மூலதனத்துடன் அபிவிருத்தி பணியைத் திறம்பட மேற்கொள்வர். வியாபாரம் சிறந்து
லாபம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும் பாசமும்
குடும்பத்திற்கு தேவையான பணவசதியும் பெற்று மகிழ்ச்சிகர வாழ்க்கை
நடத்துவர். புத்திரர் வகையில் அனுகூலம் தரும் பலன் உண்டு.
பணிபுரியும்
பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பணி உயர்வு,விரும்பிய
இடமாற்றம் பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் தொழில் முன்னேற்றமும்,
தாராள பணவரவும் பெறுவர். அரசியல்வாதிகள் புதிய பொறுப்பை ஏற்று செயல்படும்
கிரகநிலை உள்ளது. விவசாயிகளுக்கு பயிர் மகசூல் கூடும். மாணவர்கள்
படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
உஷார் நாள்: 15.6.09 இரவு 10.36 முதல் 18.6.09 காலை 5.44 மணி வரை மற்றும் 13.7.09 காலை 6.10 முதல் 15.7.09 மதியம் 1.32 மணி வரை
வெற்றிநாள்: ஜூலை 6, 7
நிறம்: காவி, வாடாமல்லி
எண்: 4, 6
பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும்.
|