தமிழ் மாத ராசி பலன் ஆனி மாதம்
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
நல்ல நெறிமுறைகளை பின்பற்றி உயர்வு பெறும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதன் புதன் அனுகூலக்குறைவான இடங்களில் பிரவேசிக்கிறார். குரு, சனி,
செவ்வாய் ஆகிய கிரகங்கள் நற்பலன் வழங்கும் வகையில் உள்ளனர். மனதில்
சிந்தனைகள் பலவகையிலும் அலைமோதும். உறவினர்களிடம் எந்த சூழ்நிலையிலும்
மனஸ்தாபம் வரும் அளவிற்கு பேசாதீர்கள். குடும்பத்தின் பணவரவிற்கேற்ப
திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கிறது.
வீடு,
வாகன வகையில் தேவையான மாற்றம் செய்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.
புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர்.
சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு கஷ்டத்தை வரவழைத்துக் கொள்ளும்
நேரமாக இருக்கிறது. கணவன், மனைவி புரிந்து நடந்து குடும்ப ஒற்றுமையைப்
பாதுகாப்பர். தந்தைவழி உறவினர்கள் நல்ல ஆலோசனையும் இயன்ற அளவில் உதவியும்
புரிவர்.
தொழிலதிபர்கள்
வெளியூர் பயணம் மேற்கொள்வர். எதிர் பார்த்த பணவரவும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சோம்பல் அல்லது தடுமாற்றம் காரணமாக வேலையில் தொய்வு
ஏற்பட்டு சலுகைகளை இழக்க நேரிடும்.
குடும்பப்
பெண்கள் குடும்பத்தேவையை நிறைவேற்ற பணமின்றி திண்டாடுவர். பணிபுரியும்
பெண்களுக்கு பணியில் ஏற்படும் தொய்வால் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு
உள்ளாகும் நிலை இருக்கிறது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை
வாய்ப்புக் களை பெறும் முயற்சியில் பலன் காண்பர். சுமாரான லாபம்
கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் இருக்கும் நற்பெயருக்கு
களங்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. விவசாயிகள் அளவான மகசூலும் கால்நடை
வளர்ப்பில் தாராள பணவரவும் காண்பர். மாணவர்கள் படிப்பில் பின்தங்கும்
நேரமாக இருக்கிறது.
உஷார் நாள்: 8.7.09 காலை 9 முதல் 10.7.09 இரவு 8.24 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 1, 2, 3
நிறம்: ரோஸ், வெள்ளை
எண்: 6, 9
பரிகாரம்: தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் செயல்களில் வெற்றி அதிகரிக்கும்.
|