தமிழ் மாத ராசி பலன் ஆனி மாதம்
ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
சிறிய செயலையும் நேர்த்தியுடன் செய்து பாராட்டு பெறும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் மேஷத்திலும் பிற்பகுதியில்
ரிஷபத்திலும் பிரவேசிக்கும் நிலை உள்ளது. பணவரவு குறையும். வேலைப்பளு
மிகவும் கடுமையாகும். சமூகத்தில் உங்களை நல்ல விதமாக நடத்தியவர்கள் கூட,
கண்டுகொள்ளாமல் செல்லும் மாறுபட்ட சூழ்நிலையை சந்திப்பீர்கள். வீடு, வாகன
வகையில் இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்துவதே போதுமானது. புத்திரர்கள்
உங்களிடம் ஏதாவது கேட்டு நச்சரிப்பர். இதனால் எரிச்சல் உணர்வு
அதிகரிக்கும். பூர்வ சொத்து வகையில் ஓரளவு வருமானமே கிடைக்கும். உடல்நலம்
பாடாய்படுத்தும்.
மருத்துவச்
செலவு கண்டு கோபம் வரும். கணவன், மனைவியிடையே குடும்ப வரவு செலவு தொடர்பாக
சூடான வாதங்கள் எழ வாய்ப்புண்டு.தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியுடன்
வாய்ப்புக்களை பெறும் நோக்கில் செயல்படுவது நல்லது. பணியாளர்கள்
ஒருமுகத்தன்மையுடன் பணி மேற்கொள்வதால் மட்டுமே குறைபாடு வராத தன்மை
இருக்கும். வியாபாரிகள் சராசரி வியாபாரமும் அதற்கேற்ப பணவரவும் பெறுவர்.
குடும்பப் பெண்கள் கணவருடன் வாக்குவாதம் வராத அளவிற்கு நடந்துகொள்வதால்
நலம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் அதிக பணிச்சுமைக்கு உட்பட நேரிடும்.
சுயதொழில் புரியும்
பெண்கள் மூலதனத்துக்கேற்ற லாபமில்லையே என வருந்தும் சூழல் ஏற்படும்.
அரசியல்வாதிகள் பேச்சிலும் செயலிலும் நிதானம் தவறி பிரச்னைகளைச் சந்திக்கக் கூடும். விவசாயிகள் அளவான
மகசூலும் மிதமான பணவரவும் பெறுவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் செயல்படுவர்.
உஷார் நாள்: 5.7.09 இரவு 9.26 முதல் 8.7.09 காலை 9 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 29, 30
நிறம்: மஞ்சள், வெள்ளை
எண்: 3, 6
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் துன்பம் விலகி இன்பம் ஏற்படும்.
|