ஆரஞ்சு
பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு
போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
இளமையுடனும் இருக்கும்.
முகச் சுருக்க வரிகளை போக்க
கசகசா -அரைத் தேக்கரண்டி
வெந்தயம் -கால் தேக்கரண்டி
முழு உளுந்தப் பருப்பு -அரைத் தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் -ஒரு சிட்டிகை
கசகசா, வெந்தயம் மற்றும் முழு உளுந்தம்பருப்பை அரைத்துக்கொள்ள வேண்டும்.
(மிகவும் மைய அரைக்க வேண்டாம்). அதனுடன் கஸ்தூரி மஞ்சளைக் கலந்து பேஸ்ட்
போல் ஆக்கிக் கொள்ளவும்.
இந்தப் பேஸ்ட்டை வாரம் ஒருமுறை முகத்தில் தடவி, 5 முதல் 10
நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், முகச் சுருக்கம் நீங்கிப் பொலிவு
கிடைத்துவிடும் என்கிறது வீட்டு வைத்தியக் குறிப்பு.