வெயில், தூசி, வெப்பம் என்று நிறம் மாறிப்போன சருமத்தை சில இயற்கையான முறையில் பேக் போட்டு முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்.
உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருக்கா? தினமும்
குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10நிமிடம்
வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும். செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் பளிச்.. கல் உப்பு ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து உடம்பில் ஸ்கிரப் செய்யலாம்
உங்கள் முகத்தில் எண்ணெய் பசை சருமமாம்..? எண்ணெய்
பசை சருமம் உள்ளவர்களுக்கு முதுகுப் பகுதியில் கரும்புள்ளிகள் வரலாம்.
அப்படி இருந்தால் குளிக்கும் பொழுது பாடி ஸ்கிரப்பர் பயன்படுத்தி
தேய்க்கவும். ஸ்கிரப் செய்வதால் தோல் மென்மையாகும். இரத்த ஓட்டமும் சீராகும். எண்ணெய்
சருமம உள்ளவர்களுக்கு உடல் ஹீட்டாகி பரு வரும் அப்படி வந்தால்
ஜாதிக்காயினை உரசி 4 நாள் போட்டல் உடனே மறைந்துவிடும் அதன்
கரும்புள்ளிகளும் போய்விடும். தினமும் 2முறை காலை, மாலையிலும் தக்காளி நன்றாக மசித்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.. உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி முகம் பொலிவாக இருக்கும்.
சரும நிறத்தை அதிகரிக்க 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது 1/2 ஸ்பூன் பால் பவுடர் 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும் ஆப்பிள்
விழுது, தக்காளி விழுது தர்பூசி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து
பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும்
குளூமையாகவும் இருக்கும். ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சியாக்காய்த்தூள், இதனை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு போய்விடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சியாக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
இளமையின ரகசியம் வெளியில் இல்லை உங்களுக்கு உள்ளே தான் இருக்கு தினமும் சரியான முறையில் நாம் பின்பற்றினால் நிச்சயம் நாம் இளமையுடன் இருக்கமுடியும். விடியற்காலையில்
சூரிய உதயமாகும் பொழுது நாமும் கண்விழித்தால் அதுவே தனி உற்சாகம் தான்..
இயற்க்கையின் அழகே தனி தான். அதனை சிறிது நேரம் ரசிக்கவும். மனதிற்க்கு
புதுவித புத்துணர்ச்சி கிடைக்கும். 9 மணிக்கு கண்விழிப்பவர்களுக்கு இந்த சுகம் கிடைக்காது பிறகு
ஒரு 30 நிமிடம் தியானம், உடல் பயிற்சி அல்லது வெளியில் சிறிது
நடைபயிற்ச்சி... உடல் வியர்க்க வேலைகள் தான் நாம் செய்வதில்லை தினமும் ஒரு
30 நிமிடம் உடல் உடல்பயிற்சி மூலம் உடலின் புதுவித உற்ச்சாகம் கிடைகிறது. சிறிது
நேரம் நீயூஸ் பேப்பர் படிங்க.. டி.வீ பாருங்க மனதை ரிலக்ஸ் செய்யுங்கள்.
இன்றைய பொழுதில் என்ன என்ன செய்யபோகிறோம் என்று திட்டமிட்டு நேரங்களை
பிரித்து வேலையினை ஆரம்பம் செய்யவும். அதன் படி அன்றைய பொழுதை செலவு செய்யுங்கள். மறக்காமல்
ஆசையாக வீட்டில் தயாரித்த அம்மாவோ, மனைவியோ சமைத்த உணவை ரசித்து
உண்ணுங்கள்.. மறக்காமல் இட்லிக்கு சட்டினி ரொம்ப சூப்பருனு சொல்லிவிட்டு
போங்க. அவங்களும் சந்தோஷத்துடன் மற்ற வேலைகளை செய்வாங்க..குறித்த
நேரத்தில் உணவு உட்கொள்வது மிகவும் நன்று. வீட்டில் சமைத்த உணவில்
ஆரோக்கியம் அதிகம்.
எப்பொழுதும்
சந்தோஷமாக சிரித்த முகத்துடன் இருங்க.. செயற்க்கையாக சிரிக்காமல் இயல்பான
சிரிப்பு உள்ளத்துக்கும் சந்தோஷம் மற்றவர்களும் உங்கள் மீது நல் மதிப்பை
ஏற்படுத்தும். செய்கின்ற வேலைகளை முடித்துவிட்டு வீண்ணாக பொழுதை கழிக்காமல் வீட்டு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் ரிலக்ஸ் செய்யுங்கள். மனதுக்கு பிடித்த இசையினை கேளுங்கள், இதமான புத்தகங்களை படியுங்கள்.. சிந்திக்க தூண்டும் விசயங்களை கேளுங்கள். இரவில் மீண்டும் சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் அழகிய வாழ்க்கையினை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.. குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவும். மனகவலைகள் எல்லாம் படுக்கை அறைக்கு கொண்டுவராமல் நிம்மதியாக தூங்கவும். இதன் படி தினமும் செய்தால் நிச்சயமாக உடல் இளமையுடன் இருக்கும்.