அழிவின் விளிம்பில் ஆயிரம் கேள்விகள்... உலகே உன் மனசாட்சி உறங்கிவிட்டதா? உறைந்துவிட்டதா?
அகிலமே உன் ஆத்மா அழுகிவிட்டதா? அழிந்துவிட்டதா?
மேற்குலகே வெள்ளை உங்கள் தோலில் மட்டும்தானா? உள்ளத்தில் இல்லையா?
அமெரிக்கரே எங்கள் அவலம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
ஐரோப்பியரே ‘ஐயோ” என்னும் எங்கள் அலறல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?
ஆசியரே வல்லிய இனமொன்று மெல்லிய இனமொன்றின் குருதியை குடித்து கும்மாளமிடுவதை நீங்கள் அறியவில்லையா?
ஆபிரிக்கரே அழுகிய எங்கள் உடல்களின் நாற்றம் உங்கள் நாசியில் ஏறவில்லையா?
அவுஸ்திரேலியரே காட்டுத் தீயில் எரியும்போதும் எறிகணைகளால் எரியும்போதும் எங்கள் உடலுக்கும் உங்கள் உடலுக்கும் வலியும் வேதனையும் ஒன்றேயென்பதை நீங்கள் உணரவில்லையா?
பழிவாங்கத் துடிக்கும் சோனியாவென்னும் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியினால் ஈழத்தமிழினம் வீழ்ந்து சாகிறது
இறந்த அன்னையின் சரிந்த மார்பில் பால்குடிக்கத் துடிக்கும் பச்சிளங்குழந்தைகள்
கால்களை இழந்த பாலகர்கள்
கைகளை இழந்த வயோதிபர்கள்
நடைப்பிணமாய் நிஜப்பிணமாய் வீதியோரங்களில் விலங்குகள்போல் மனிதர்கள்
பாதுகாப்பு வலயமென்று பறைசாற்றி பதுங்குக் குழியிலிருந்தோரை ஒதுங்க வைத்து கொத்துக் குண்டு வீசி ஒட்டுபொத்தமாய் கொன்று குவிக்கும் கொடூரம்