குண்டு மழையில் கோரச்சாவுகள் நண்டுப் பிடிக்குள் நசுங்கிய உயிர்கள் புதைமேட்டுச் சருகாய் அங்கங்களின் பாகங்கள் கதையல்ல நிஜம் உண்மை அங்கே உறங்குகிறது!!!
உறங்காத உண்மைகள் எத்தனை எத்தனை அங்கே மரங்களில் மரக்கிளைகளில் மண்ணில் எங்கும் மனித உடல்களின் சதைகள் ஜயகோ இது என்ன கொடுமை ஏன் இந்த தொடர்கதைகள்-அல்ல தொடர்கொலைகள்
கேட்பாரற்ற நாதியினமா எம் இனம் உலக தமிழ் உறவுகளே ஓன்று கூடுங்கள் கொதித்தெழுங்கள் நித்தம் தொடரும் நிஜக்கொலைகளை உலகுக்கு உணர்த்துங்கள்
எம் இனம் அங்கே அழிந்து கொண்டிருக்க-எம் உள்ளத்தை நாம் ஏன் உறங்க வைகக வேணும் உண்மைக்காக குரல் எழுப்புவோம்!!!
மனித சக்தியே மகத்தான சக்தி குரல் எழுப்புவோம் உலக பார்வையை-எம் பக்கம் திருப்பி எம் உறவுகளை காத்திடுவோம்.