வன்னி மண்ணில் தொடர்ந்து குண்டுச் சத்தங்கள் என்காதில் கேட்கிறது..
அன்றிரவு அதிகாலை மூன்றரை மணியளவில் இராணுவத்தின் வான்குண்டுத் தாக்குதல் சரமாரியாகப் பொழிகின்றது...
அனைவரும் திக்குத்திசை மாறி ஓடுகின்றார்கள் அந்நேரத்தில் காலில் காயத்துடன் விழுந்துகிடக்கின்ற சிறுவனொருவன் "காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" என்று ஒரு அவலக்குரல்.... என் காதில் கேட்க. அந்தவேலையில் யாரை யார் பார்ப்பது.
ஐ.நா. சபை பார்க்குமா? அமெரிக்கா பார்க்குமா? அல்லது தோழமை நாடான இந்தியா தான் காப்பாற்றுமா?
திடீரென கண்விழித்து எழுந்தேன். ஏதுமாறியாத ஐந்து வயது நிரம்பிய சிறுவனின் கால்களிலிருந்து இரத்தம் வடிகின்றது.
அச்சிறுவானேடு நானும் சில நிமிடங்கள் கற்பனையில் கதைத்தேன்.....
எம் மண் காக்க நானே தனியொருவன் என்று, பாதிக்கால் இழந்த காயத்துடன் விழுந்து கிடக்கின்றேன்.
வைகறையின் வண்ண நிலவாய் மனதில் வரைந்து நிறம் தீட்டிய எதிர்கால சித்திரங்கள் ......... இடையில் நெடுநாளாய் அனுபவித்த வேதனைகளும் துயரங்களும்......... வீணாய்க்கழித்த காலங்களும்....... கற்றுத் தேர்ந்த வாழ்க்கைப் பாடமாய்......... சோகங்களைச் சொல்லியழ சொந்தங்களும் இல்லை........ காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றேன். எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புடன்.