அவலக் குரல் கேட்கலையோ - அகிலமே அராயக அரசுக்கு நீங்களும்தான் உறுதுணையோ விழியிலிருந்து சொரிகின்ற குருதியிலும் உடலங்களில் லிருந்து சொரிகின்ற குருதியிலும் இரத்தக்களறி ஓடுதிங்கே
உயிர் கொல்லிக் குண்டுகள் எண்ணற்று வீழ்கிறது எம் தலைமேலே அங்கம் அங்கமாய் துண்டம் துண்டமாய் தமிழரின் உடலங்கள் வீதியெங்கும் பிணக்காட்டிலிருந்து யனனத்தை யாசிக்கின்றோம்
இந்திய வல்லாதிக்கமே - இன்னல் இளைப்பதை விட்டுவிடு உன் துணை மிதவாத செருக்கிலே இனவாத கொடியோன் ராஜபக்ச தன்னின பரிவாரத்துடன் தமிழின பிணம் தின்று களிக்கின்றான்
இரங்கலுரை இறந்தோரை மீட்ப்பதில்லை பொல்லாங்கு விட்டு போடும் வேசம் விட்டு வாழ்வளியுங்கள் வந்து கரம்கொடுங்கள் மரண விட்டத்திற்குள் வீழும் நரமாமிச குவியலை தடுத்தாட்கொள்ளுங்கள் யனனம் மணித்துளிகளை வெல்லும் சுய உரிமை வாழ்வொன்றே - சுதந்திர கேடுன்றி நிரந்தர அமைதி தரும்.