அமைச்சரென அவை சார்ந்தரென ஊடகமென ஊர் மக்களென எத்தனையோ பேர் வந்து ஏதோ பார்ப்பதாய் பேசுவதாய் நம்பிக்கை தந்தும் -போனாச்சு. நடைமுறையில் தாவென்று ஒரு சொட்டும் அசையாது வெட்டொன்று துட்டொன்றாய் பட்டினி சாவோடு பசி வேக வைக்கும் - ஐந்து அம்சக் கோரிக்கையை டுசல் டோவ் மாநில பாராளமன்ற முனறலில் ;முழுமையாய் தத்துக் கொடுத்து மனுவை முன் போட்டு விட்டு பிச்சா பாத்திரத்தில் -ஆமாம் அன்னம் தண்ணி போட வேண்டாம் அதற்கான பதில் வேண்டுமென்றே ஆவலாய்ப் பார்த்திருக்கும் வேளையிது !
அன்னை பூபதியின் அழகான வாரிசுகள் தீலீபன் தோள் தொட்ட தோழர்;கள் உங்கள் காமிய நோன்பு கருக்கட்டி மெருகேற்றும் வேளையிது மூன்றாம் தலை முறையில் மேற்கத்திய வாழ்வியலில் நல்ல சோக்காய் வளர்ந்தவர்கள் வேளைக்கொரு தின் பண்டம் மூளைக்கொரு வேலை மூடு போக்க ஊர் ஒன்று ஊர் உலா ஆம் எல்லாமே இடை நிறுத்தி ஏகப்பட் நாளாச்சு வன்னி அவலத்தோடு வாழ்ந்து போகின்றோம் என்றபடி இது தங்கள் உயிரை உறவுகளை நகர்த்தி உட்கார்ந்து இருக்கும் உண்ணா நோன்பினர் எங்களுக்காய் தந்த இறைமையிது !
வேகம் கொண்டீர்கள் வேகும் வன்முறைக்காய் ஆகும் ஆகுமென்று ஆண்டாண்டு காத்திருந்தோம். ஓரினம் உய்திட உயிர் போகட்டுமே உட்கார்ந்து விட்டீர்கள் உணர்வாளரே ! எங்கள் மீட்புக்காய் எல்லாம் துறந்தும் உயிர் துறக்க முன்வந்தார் பற்றாளர்கள்
உங்களுக்கும் உலகமுண்டு -இங்கு உல்லாச வாழ்வுண்டு உறவுகள் ஊருண்டு அல்ல அவை அதற்கும் மேல் எங்களுக்குத் தேசம் வேண்டும் என்பது தான் தாரகமாய் -தார்மீக கோரிக்கை தமிழச்சிகள் ஒன்பது பேருமாய் இளையவராய் ஐவருமாய் தருவார் தருவாரென தாகமாய் நோன்புள்ளார் தக்க பலம் தந்துவிட பக்க பலம் சேர்வாக்க தமிழரே கரங்கள் தாருங்கள் தக்கதாய் ஒத்ததாகவே ! சேருங்கள் !!