கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-04-25
10:40 AM

Welcome Guest | RSS Main | ஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள்

1)உன் விருப்பம் நேர்மையானதாக இருக்குமானால், உன்னை சுற்றி இருக்கும் எல்லாமே ! அதை நீ அடைய உதவி செய்யும்.

2)நீ நினைத்த போதெல்லாம் உனக்கு அருள் புரிய தெய்வம் ஒன்றும் உனக்கு கடமைப்படிருக்கவில்லை! அவன் அருளைப் பெற தகுதியானவனாக உன்னை மாற்றிக் கொள்!

3) நீ செய்யும் ஓவ்வொரு தீய செய்யலுக்கும் ஒரு தீய பலன் நிச்சயம் உண்டு!
நீ செய்யும் ஓவ்வொரு நல்ல செய்யலுக்கும் ஒரு நல்ல பலன் நிச்சயம் உண்டு!


4)ஒரு பூவைப் போல, வெளிப்படையாக, எளிமையாக, தெளிவாக, இனிமையாக, மென்மையாக, பாரபட்சமின்றி உயர்ந்த பண்புடன் இருங்கள்!

5)கடவுளிடம் நம்பிக்கையோடு இரு!
நம்பிக்கைக்குரியவனாய் இரு!

6)தன்னம்பிக்கை எனும் சூரியன் இருள் சூழ்ந்த இதயத்திற்கு வரட்டும், எல்லாமே எளிதாகிவிடும்.

7)உன் உள்ளத்தில் ஏற்படும் எண்ணம் எதுவாக இருந்தாலும்! உன் வாழ்வின் உண்மைகளையும் நன்மைகளையும் சிதைத்துவிடாதபடி இருக்கட்டும்!

8)உலகம் துயரங்கள் நிறைந்ததுதான், ஆனால் நம்மால் அதை உருமாற்றம் செய்ய முடியும்!

9)கோபமும் பயமும் உங்கள் நோயை நீட்டிக்கும்!
அமைதியும் சாந்தமும் உங்களை குணபடுத்தும்!

10)அற்புதமான பேச்சைவிட! ஒரு துளி அன்பினால் அதிகமாக சாதிக்க முடியும்!

11)தீமைகள் ஏன் வருகின்றன, எப்படி வருகின்றன என்று ஆராய்ச்சி செய்வதில் பயன் இல்லை. அவைகள் எங்கும் இருக்கின்றன! அவைகளை அசட்டை செய்! நல்ல விசயங்களில் மனதினை செலுத்து எல்லாம் நலமாகும்!

12)அறிவது நல்லது! வாழ்வது நல்லது! அறிந்து வாழ்வது! அதினிலும் நல்லது!

13)பிரச்சனைகளை புரிந்துகொண்டாலே அதில் பாதி தீர்ந்துவிடுகிறது! அதைப் புரிந்துக் கொள்ள முதலில் உன் மனம் அமைதியாக இருக்க வேண்டும்!

14)இதுவரை நீ எப்படி இருந்தாய் என்பதைவிட
இனி நீ எப்படி இருக்க விரும்புகிறாய் ! என்பதை மட்டும் நினைத்து செயல்படு கண்டிப்பாக முன்னேற்றம் அடைவாய்!
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz