கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-03-28
4:53 PM

Welcome Guest | RSS Main | ஓசையில்லா விமானம் வடிவமைப்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz