பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பேசிக்
(BASIC) என பெயரிடப்பட உள்ள இந்த புதிய உளவு செயற்கைக்கோள் வரும் 2011ம்
ஆண்டுக்குள் நிறுவப்படும் என்றும், இதன் மதிப்பு 2 முதல் 4 பில்லியன்
டாலர் வரை இருக்கலாம் என்றும் பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக
செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிரிகளின் ராணுவ பலம், ராணுவ
நடவடிக்கைகளை வேவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ஏற்கனவே
பல செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை உளவு
செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அதிகம்
செலவாகும் என்பதால் கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த திட்டத்திற்கு ஒப்புதல்
அளிக்க மறுத்த பென்ட்கன், தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால்
இந்த சாட்டிலைட்டிற்காக 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிப்பதற்கு
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுக்காப்புத்துறை வல்லுனர்கள்
பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.